அதானி குழுமம் கடனை அடைக்கவில்லையா..? அதானி குழும தலைமை நிதித் தலைவர் (CFO) விமர்சனங்களுக்கு பதலடி கொடுத்துள்ளார்.
அதானி நிறுவனம் கடன்களை முழுமையாகத் திரும்பி செலுத்தியதாக கூறிய நிலையில், இன்னும் முழுமையாக அடைக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகி அதானிக்கு புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தான் அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதானி செலுத்திய கடன்!
பங்குச் சந்தையில் அனைத்து அதானி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், அதானி குழுமம் கடன்களை அடைத்துவிட்டதாக சொன்னாலும், இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என 'தி கென்' (The Ken) நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான் காரணம்.
கடன்கள் அடைப்பு!
அதானிக் குழுமம் கடந்த ஜனவரி மாதம் தனது பங்குகளை அடமானம் வைத்து பெற்ற 2.15 பில்லியன் டாலர் கடனை அடைத்துவிட்டதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அதானி குழுமம் முயற்சித்து வரும் நிலையில், கடன்களை அடைத்துவிட்டதாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
நிதித் தலைவர்
இது குறித்து அதானிக் குழுமத்தின் நிதித் தலைவர் ஜுகேஷிந்தர் ராபி சிங் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அடுத்த காலாண்டு முடிவுகள் வெளியாகும்போது, இதெல்லாம் வேண்டுமென்றே செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அனைவரும் அறிவார்கள் என பதிவிட்டுள்ளார்.
தி கென் நிறுவனம் அறிக்கை!
அதானி முழுமையாக கடன்களை அடைக்கவில்லை என கென் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. ஏனெனில், கடன்களுக்காக அடமானம் வைக்கப்பட்ட அதானி நிறுவனங்களின் புரமோட்டர் பங்குகளை இன்னும் வங்கிகள் முழுமையாக விடுவிக்கவில்லை.
50 சதவீத கடன்
அதானி குழுமம் பங்குகளை அடமானமாக வைத்து வாங்கிய கடன்களில் பாதியை மட்டுமே அடைத்துள்ளதாகவும், அதனால் இன்னும் புரமோட்டர் பங்குகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும் கென் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அதானி அடைத்த கடன்களுக்காக அதானி போர்ட்ஸ் பங்குகள் மட்டுமே வங்கிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்படாத நிறுவனங்கள்!
இன்னும் அதானிக் குழுமத்தின் அதானி கிரீன் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் வங்கிகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. வழக்கமாக, கடன்களை அடைத்த பின் பங்குகளை வங்கிகள் உடனடியாக விடுவித்துவிடுவார்கள். ஆனால், அதானி விவகாரத்தில் இன்னும் பங்குகளை வங்கிகள் விடுவிக்காததால், அதானி இன்னும் முழுமையாக கடன்களை அடைக்கவில்லை என கென் அறிக்கை கூறுகிறது.
பங்குச் சந்தை எதிரொலி!
இந்த தி கென் அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. அதிலும் பங்குச் சந்தையில் பட்டியலிட்டப்பட்ட 10 அதானிக் குழுமப் பங்குகளும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம் சுமார் 135 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளன.
NSE மற்றும் BSE கேள்வி!
இந்நிலையில், அதானி குழுமம் இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என வெளியாகியுள்ள தகவல் குறித்து அதானி குழுமத்திடம் தேசிய பங்குச் சந்தையும் (NSE), மும்பை பங்குச் சந்தையும் (BSE) விளக்கம் கேட்டுள்ளன.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications