இந்திய வரலாற்றிலேயே இதுவரை சிக்காத அளவிற்கு ஓரே இடத்தில் அதுவும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில், கௌதம் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ அளவிலான ஹெராயின் போதைப் பொருளை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் சோதனையில் சிக்கியுள்ளது.
இந்தியாவில் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அதிகளவில் மத்திய அரசு தனியாருக்கு அளித்து வரும் நிலையில், இந்திய பணக்காரர்களின் ஒருவரான கௌதம் ஆதானி இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் விளக்கம் கொடுத்துள்ளது.
முந்த்ரா துறைமுகம்
குஜராத் மாநிலத்தின் கட்ச் பிராந்தியத்தில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் தான் தற்போது ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-ஐ இரு கண்டைனர்களில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் கைப்பற்றியுள்ளது. முந்த்ரா துறைமுகம் அதானி போர்ட் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு முக்கியமான துறைமுகம்.
கௌதம் அதானி
இந்த விஷயம் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் இதற்குக் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. அதானி குரூப் இந்த விளக்கத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
அதானி குரூப் வாழ்த்துக்கள்
அதானி குரூப் டிவிட்டரில், செப்டம்பர் 16ஆம் தேதி சர்வதேச முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கண்டைனர்களில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம், DRI மற்றும் சுங்கத் துறைக்கு வாழ்த்துக்கள்.
யாருக்கும் அதிகாரம் இல்லை
இந்திய அரசு சட்டத்தின் மூலம் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் சுங்க துறை சரக்குகளைத் திறந்து, ஆய்வு செய்யவும், பறிமுதல் செய்யவும் உரிமை உண்டு. ஆனால் துறைமுகத்தை இயக்கும் நிறுவனங்களுக்கு இத்தகைய அதிகாரம் இந்தியாவில் யாருக்கும் இல்லை, துறைமுகத்தை இயக்கும் நிறுவனங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளது.
பொய்களுக்கு முற்றுப்புள்ளி
இந்த அறிக்கை மூலம் சமுக வலைத்தளத்தில் பரவி வரும் பொய்யான, தவறான கருத்துக்களுக்கு விளக்கம் தரப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதானி போர்ட் மற்றும் SEZ நிறுவனம் கடல்வழி போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனம். முந்த்ரா துறைமுகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பிற துறைமுகங்களில் வரும் பல ஆயிரம் கண்டைனர்களில் இருக்கும் பொருட்களைச் சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது அதானி போர்ட்.
ஆப்கானிஸ்தான்
இந்த ஹெராயின் போதைப் பொருள் கொண்ட கண்டைனர் ஆப்கானிஸ்தானில் இருந்து டேல்க் (talc) பவுடர் உடன் சேர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு ஈரான் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை நிறுவனம்
இந்தக் கண்டைனரை சென்னையைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் கம்பெனி புக் செய்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் ஹெராயின் அடங்கிய கண்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
கைது நடவடிக்கை
இந்நிலையில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் ஆஷி டிரேடிங் கம்பெனியின் உரிமையாளர்களான எம்.சுதாகரன் மற்றும் அவரது மனைவி ஜி.துர்கா பூர்னா வைஷாலி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
விஜயவாடா முகவரி
இதேபோல் விஜயவாடா முகவரி ஒரு வீட்டின் முகவரி என்பதால் வீட்டின் உரிமையாளரை விசாரணை செய்யப்பட்டும் வீட்டை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருவதாகத் தெரிகிறது. முதல்கட்ட விசாரணையில் விஜயவாடா நிறுவனம் பதிவு செய்ய இந்த முகவரியைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது எனக் காவல் துறை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications