சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்து வரும் அதானி குழுமம், இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அண்டை நாடுகளிலும் பெரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இலங்கையில் கிரீன் எனர்ஜி, துறைமுகம் திட்டங்கள், பங்களாதேஷ் நாட்டில் மின்சார திட்டங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தற்போது பூட்டான் நாட்டின் பிரபலமான நிறுவனத்துடன் முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது அதானி குழுமம்.

இதற்காக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே-யை (Dasho Tshering Tobgay) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் வேளையில் அதானி குழுமம் மற்றும் அந்நாட்டு அரசு நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.
பூட்டான் நாட்டில் 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர்மின் நிலையம் (Green Hydroelectric Plant) அமைப்பதற்கு அதானி குழுமம், மற்றும் அந்நாட்டின் Druk Green Power Corporation (DGPC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.

பூட்டான் பிரதமர் Dasho Tshering Tobgay மற்றும் பூட்டான் மன்னர் Jigme Khesar Namgyel Wangchuck ஆகியோரை சந்தித்த அதானி குழும தலைவர் கௌதம் அதானி, பூட்டானின் கட்டமைப்பு வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார். மேலும், நீர்மின் திட்டங்கள் உட்படப் பிற திட்டங்களிலும் பூட்டானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்துள்ளார் கௌதம் அதானி.
இந்த நிலையில் கௌதம் அதானி ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளமான எக்ஸ்-ல் செய்த பதிவில் "பூட்டான் பிரதமர் Dasho Tshering Tobgay அவர்களுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளித்தது. சுகா மாகாணத்தில் 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர்மின் நிலையம் அமைப்பதற்கு DGPC நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பூட்டான் மன்னர் தலைமையின் கீழ் அந்நாடு மேற்கொண்டு வரும் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் பாராட்டத்தக்கவை. பூட்டானில் நீர்மின் திட்டங்கள் உட்பட பிற கட்டமைப்பு திட்டங்களிலும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறோம்" என்று பதிவிட்டார் கௌதம் அதானி.
பூட்டான் மன்னர் Jigme Khesar Namgyel Wangchuck அவர்களையும் சந்தித்த கௌதம் அதானி, கெலுபூ நகரத்தில் அமைக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் நட்பு திட்டமான "Gelephu Mindfulness City" திட்டத்தைக் கண்டு வியந்துள்ளதாக கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.
கெலுபூ நகரத்தில் அமைக்கப்படவுள்ள பெரிய கம்ப்யூட்டிங் சென்டர்கள் மற்றும் தரவு சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல்-க்கு உகந்த வகையில் அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதைப் பார்க்கும் போது தான் மிகவும் வியப்படைந்ததாகவும் கௌதம் அதானி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications