அதானி குழுமத்தின் ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகளுக்கு இறுதி தீர்வுகளைக் காண சுப்ரீம் கோர்ட் தீவிரம் காட்டி வரும் வேளையில், பல வர்த்தகத்தை விற்பனை செய்து அதிக லாபம் கொடுக்கும் துறையில் முதலீடு செய்வதோடு, புதிய துறையிலும், சந்தைகளிலும் அதானி குழுமம் நுழையத் திட்டமிட்டு வருகிறது.
அதானி குழுமம் புதிய வர்த்தகச் சந்தையில் நுழைய முக்கிய நம்பிக்கையைக் கொடுத்தது முதலில் ஆஸ்திரேலியா நாட்டின் நிலக்கரி ஒப்பந்தம், அதன் பின்பு பங்களாதேஷ் நாட்டிற்கான மின்சார ஏற்றுமதி தான், அதைத் தொடர்ந்து இஸ்ரேல் வடக்குப் பகுதியில் மிகவும் முக்கியமான துறைமுகமாக இருக்கும் ஹைஃபா துறைமுகத்தைக் கைப்பற்றியது தான்.

இந்த 3 திட்டங்கள் தான் அதானி குழுமம் சர்வதேச அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் வாய்ப்பை பெரியதாகப் பார்க்கத் துவங்கியது. இதைத் தொடர்ந்து இலங்கை பொருளாதாரம் திவாலானதில் இருந்து அதானி குழுமம் அந்நாட்டில் முதலீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை தலைநகரான கொழும்பில் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ டீப்வாட்டர் வெஸ்ட் கண்டைனர் டெர்மினல் கட்டுமான திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில் இத்திட்டத்திற்குச் சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியை அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதியியல் அமைப்பு வாயிலாக அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கும் நோக்குடன் இந்த முக்கியமான திட்டத்திற்கு அமெரிக்கா முதலீடு செய்ய உள்ளது. இதோடு இலங்கை நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அதானி கிரீன் நிறுவனம் அந்நாட்டின் மின்சாரத் துறையில் சுமார் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாகக் கரண் அதானி தெரிவித்தார்.
இப்படி இலங்கையில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் அதானி குழுமம் அடுத்த 20 வருடத்திற்கு இந்நாட்டில் வர்த்தகத்திலும், வளர்ச்சியிலும் தொடர்ந்து முதலீடு செய்யும் இலக்கை கொண்டு உள்ளது. இப்படியிருக்கையில் ஒரு இந்திய நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அமெரிக்கா முதலீடு செய்துள்ளதைச் சர்வதேச ஒத்துழைப்பு அளிப்பதைக் காட்டுகிறது எனக் கரண் அதானி தெரிவித்தார்.
இதோடு கரண் அதானி, அதானி குழுமம் தற்போதைய வெளிநாட்டு வர்த்தகமான இலங்கை, இஸ்ரேலை தாண்டி, விரைவில் பங்களாதேஷ், வியட்நாம், தான்சானியா ஆகிய நாடுகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகளைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் இந்தியாவில் எப்படி விரிவாக்கம் செய்கிறதோ, அதேபோல் வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அதானி குழுமம் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் மூலம் டார்கெட் செய்யும் நாடுகள் அனைத்தும் சீனா-வின் கடன் வலையில் சிக்கியிருக்கும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கடன் வலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முறை விமர்சனம் செய்துள்ள அதானி குழுமத்திற்குச் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க நினைக்கும் அமெரிக்கா பக்க பலமாக இருக்க உள்ளது.
சமீபத்தில் உலக நாடுகளில் சீனா சார்பில் வரும் கட்டமான விண்ணப்பங்களை ஏற்பதைக் குறைந்துள்ளது. இந்தக் கேப்-ஐ பயன்படுத்திக்கொள்ள அதானி குழுமம் முயற்சி செய்வதாகத் தெரிகிறது. ஆனால் சீன அரசு அந்நாட்டு வங்கிகள், நிறுவனங்கள், நிதி அமைப்புகள், முதலீட்டு வாரியங்கள் வாயிலாக 165 நாடுகளுக்கு 1.1 டிரில்லியன் டாலர் அளவிலான பணத்தைக் கடனாகக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications