சென்னை: இந்திய வரலாற்றில் இதுவரையில் எந்தொரு வர்த்தகக் குழுமம் செய்திடாத வகையில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதானி குழுமம் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆனால் இதேவேளையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஒரு அறிக்கை மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 15 நாளில் பாதியாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் நிக்கி ஏசியா அமைப்பின் அதானி குழுமத்தின் கடன் அளவை கணக்கிட்டு வெளியிட்டு உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூட அதானி குழுமம் அதிகப்படியான கடனில் இருப்பதாக அறிவித்த நிலையில் அதானி குழுமம் பல கடன்களை அடுத்தடுத்து குறைத்து வருகிறது. அதிலும் முக்கியமாக 9000 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைத்து வாங்கியிருந்ததை முன்கூட்டியே திருப்பியுள்ளது.
நிக்கி ஏசியா
நிக்கி ஏசியா வெளியிட்ட ஆய்வு முடிவுகள் படி அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு 41.1 பில்லியன் டாலர் இந்தியா ரூபாய் மதிப்பில் இதன் அளவு 3.39 லட்சம் கோடி ரூபாய். மேலும் இது இந்தியப் பொருளாதாரத்தின் 1 சதவீதம் என அறிவித்துள்ளது நிக்கி ஏசியா.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் சமீபத்தில் கைப்பற்றிய ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், NDTV என மொத்தம் 10 நிறுவனங்களின் மொத்த கடன் அளவு தான் இந்த 3.39 லட்சம் கோடி ரூபாய். நிக்கி ஏசியா அமைப்பு அதானி குழுமம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாங்கிய கடனை சேர்த்து கணக்கிட்டு உள்ளது.
1.2 சதவீத ஜிடிபி
இந்தியாவின் நாமினல் ஜிடிபி அளவு அக்டோபர் இறுதியில் 273 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்து இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இந்தியா ஜிடிபியில் 1.2 சதவீதத்தை அதானி குழுமம் கடனாகப் பெற்றுள்ளது என நிக்கி ஏசியா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
10 நிறுவனங்கள்
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் மொத்த ஈக்விட்டி ரேஷியோ வெறும் 25 சதவீதம் மட்டுமே, அதிலும் குறிப்பாக மார்ச் 2022 தரவுகள் படி அதானி கிரின் எனர்ஜி ஈக்விட்டி ரேஷியோ வெறும் 2 சதவீதம் என நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. ஈக்விட்டி ரேஷியோ என்பது ஒரு நிறுவனம் எந்த அளவுக்குக் கடன்களை நம்பியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஈக்விட்டி ரேஷியோ எப்போதும் அதிகமாகவே இருக்க வேண்டும்.
மொத்த சொத்து மதிப்பு
இதேவேளையில் அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு 4.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, சொத்து மதிப்பை தாண்டி கடன் வாங்கவில்லை என்றாலும் கடன் அளவு அதிகமாக இருப்பது முதலீட்டாளர்களுக்குப் பெரும் உறுத்தலாக உள்ளது. இதைச் சரி செய்யும் வண்ணம் அடுத்தடுத்துக் கடனை அடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அதானி குழுமம்.
ஹிண்டன்பர்க் அறிக்கை
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் 7 அதானி குழு பங்குகளின் விலை பெரிய அளவில் சரிந்த நிலையில் சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து அதானி குழுமம் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்தையும் ரத்து செய்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications