அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து 3 முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்ய செபிக்கு உத்தரவிட்ட கையோடு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரேயின் தலைமையில் திரு ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், திரு.நந்தன் நிலகேணி, திரு.கே.வி.காமத், திரு.சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த சிறப்பு குழு அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து செபி இதுவரையில் செய்த ஆய்வின் விபரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகளின் விலையை முறைகேடான வகையில் உயர்த்தப்பட்டு உள்ளது என்பதை இதுவரையிலான ஆய்விலும் விசாரணையிலும் உறுதியான ஆதாரங்கள் உடன் கண்டுப்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இதைவிட முக்கியமாக செபி இந்த ஆய்வின் போது அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது, ஜனவரி 24 ஆம் தேதி தான் அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்கு முன்னரே அதானி குழும பங்குகள் மீதான Short Position பெரிய அளவில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து செபி-யின் ஆய்வில் ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாகவே 6 நிறுவனங்கள் அதானி குழும பங்குகளில் ஷாட் பொசிஷன் செய்துள்ளது. அதாவது அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே ஹிண்டன்பர்க் வெளியிடப்போகும் அறிக்கை குறித்த தகவலை அறிந்துக்கொண்ட் ஷாட் பொசிஷன் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 6 நிறுவனங்களில் 4 வெளிநாட்டு போர்ட்ரோலியோ நிறுவனங்களும், ஒரு கார்பரேட் நிறுவனமும், ஒரு தனிநபரும் அடங்குவார்கள் என சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகம் பெரிய அளவிலான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதானி குழும பங்குகளை ஷாட் செய்யப்பட்டு உள்ளதால் அதிகம் லாபம் பெற்று இருக்க கூடும்.
பங்குச்சந்தையில் பெரிய பணத்தைப் பார்க்க சில வழிகள் உள்ளது, அதில் முக்கியமானது Short Position, மற்றொன்று Long Postion. இதில் Short Position என்றால் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் எனப் பிட்டிங் செய்து முதலீடு செய்வது, இதில் பங்கு விலை குறைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம். மற்றொன்று Long Postion இதில் பங்கு விலை உயர்ந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம்.
அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 6 மாதம் கூடுதல் அவகாசம் செபி கேட்டு மனு கொடுத்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் செபியின் 6 மாதம் கால அவகாச கோரிக்கையை ரத்து செய்து வெள்ளிக்கிழமை அறிவித்த 3 மாத அவகாசம் அடிப்படையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செபி அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை விடுத்த போது நீதிபதிகள் ஏற்கனவே கொடுத்த 2 மாதம், தற்போது கொடுக்கப்பட்டு உள்ள கூடுதலான 3 மாதம் சேர்த்தால் மொத்தம் 5 மாதம் அவகாசம் கிடைத்துள்ளது என செபி தரப்பிடம் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு செபி-யின் விசாரணையை கண்காணித்தும், ஆய்வு செய்து வரும் வேளையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட 13 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று செபி சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு கண்டறிந்துள்ளது.
மேலும் செபி அக்டோபர் 2020 முதல் அதானி குழுமத்தின் பங்கு இருப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதில் உறுதியான ஆதாரங்களை செபி கண்டறியவில்லை எனவும் இந்த சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications