அதானி குழுமத்தின் பங்கு விலையில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் பட்டியலிட்டது. இந்த குற்றச்சாட்டுகள் மீதான செபியின் விசாரணை குறித்து திங்கட்கிழமை மாலையில் சுப்ரீம் கோர்ட்-ல் அறிக்கை சமர்ப்பித்தது.
இன்று செவ்வாயன்று வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் விசாரணையின் நிலை குறித்து கேட்டப்போது, நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அதாவது ஆகஸ்ட் 14க்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியது.

செபி தரப்பில் இருந்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றம் விசாரணை நிலை குறித்த கேள்விக்கு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பென்ச்-க்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விசாரணைக்கு அவகாசம் அளித்துள்ள நிலையில், வேகமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் உடன் இன்றைய விசாரணையில் நீதிபதிகள் பி எஸ் நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்-க்கு செபி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு செபி திங்களன்று பதில் அறிக்கையை தாக்கல் செய்ததாக கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்று SEBI பதில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை திங்கட்கிழமை மாலை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால், உங்கள் முன்னிலையில் இல்லை என துஷார் மேத்தா விளக்கம் கொடுத்தார். செபி உச்ச நீதிமன்றத்தில் அதானி - ஹிண்டர்பெர்க் ரிசர்ச் தொடர்பான வழக்கு குறித்து சுமார் 41 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
செவ்வாயன்று நடந்த விசாரணையின் போது, நிபுணர் குழு தனது அறிக்கையில் சில பரிந்துரைகளை வழங்கியது. அதற்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் துஷார் மேத்தா விளக்கம் கொடுத்தார். மேலும் அதானி குழுமத்தின் பங்கு விலையில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் மீதான செபியின் விசாரணை வேகமாக நடந்து வருவதை துஷார் மேத்தா பல முறை உறுதி செய்தார்.
செபி தனது உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் 2019ல் ஆப்ஷோர் பண்ட்ஸ் குறித்து செபியிடம் விபரங்களை சமர்ப்பிப்பதில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம், நிதி ஆதாரங்களின் விபரங்களை திரட்டுவதில் பெரிய பிரச்சனை இருக்காது என விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பான கேள்வியை உச்ச நீதிமன்றத்தின் நிபுணர் குழு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications