அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கொண்ட அறிக்கையை அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. இதனால் பல லட்சம் ரீடைல் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை இழந்தனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து தற்போது செபி உச்ச நீதிமன்றத்தில் அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தொடர்பான வழக்கு குறித்து சுமார் 41 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சந்தை கட்டுப்பாட்டாளரான செபி உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உரிய உத்தரவை பெற காத்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக செபி வைத்த கோரிக்கையை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அதானி ஹிண்டன்பர்க் விசாணையில் உச்ச நீதிமன்றம் நியமித்த வில்லுனர்கள் குழு பத்திர சந்தையின் விதிமீறல்கள் மீது முறையாக நடவடிக்கை எடுத்து இச்சந்தையின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட் அதானி ஹிண்டன்பர்க் விவகாரத்தின் விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் செபி தனது அறிக்கையில் 2019ல் ஆப்ஷோர் பண்ட்ஸ் குறித்து செபியிடம் விபரங்களை சமர்ப்பிப்பதில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம், நிதி ஆதாரங்களின் விபரங்களை திரட்டுவதில் பெரிய பிரச்சனை இருக்காது என விளக்கம் கொடுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் மார்ச் மாதம் நியமித்த வல்லுநர்கள் குழு கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையில் ஆய்வு செய்து வெளியிட்ட அறிவிப்பில், தற்போது திரட்டப்பட்டு உள்ள விபரங்கள், ஆதாரங்களை வைத்து அதானி குழுமம் பங்கு இருப்பு, பங்கு விலையில் முறைகேடு செய்துள்ளதாக அறிவிக்க முடியாது என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து செபி திங்கட்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் வல்லுநர்கள் குழு வழக்கிற்கான தீர்வுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காகக் கொள்கைகளை வகுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் செபி பல விஷயங்களைக் கவனித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications