ஒட்டுமொத்த இந்தியாவும் பல மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு விஷயம் அதானி - ஹிண்டன்பெர்க் வழக்கின் தீர்ப்பு தான். இவ்வழக்கின் விசாரணையை நீதிமன்றம் இன்று, நாளை எனத் தொடர்ந்து ஒத்திவைத்து வரும் வேளையில் தலைமை நீதிபதி DY சந்திரசூட் வைத்த கடைசிக் கெடு கொடுத்துள்ளார்.
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் புதன்கிழமைக்குள் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டார். நீதிபதி சந்திரசூட்-ன் திடீர் அறிவிப்புக்கு முக்கியக் காரணம் உள்ளது.

அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் பலமுறை ஒத்திவைக்கப்படுவதாகவும், மனுதாரர்கள் இவ்வழக்கை விசாரிக்கப் பல மறை முயற்சித்து வருவதாகவும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் புதன்கிழமைக்குள் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு பிரசாந்த் பூஷன் கோரிக்கைக்குத் தலைமை நீதிபதி பதிலளித்தார்.
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் மனுதாரர் ஒருவரின் சார்பில் பிரசாந்த் பூஷன் ஆஜரானார், அப்போது இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரணை செய்யப் பட்டியலிடப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும் பிரசாந்த் பூஷன் கூறினார்.
இதோடு தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக அரசு 2 பக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும், இது தொடர்பாகவும் விசாரிக்க உத்தரவிட்டார். இதன் மூலம் புதன்கிழமை வரையில் அரசு, செபி உட்பட அனைத்து தரப்பினருக்கும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த இறுதி அறிக்கையைப் பெற்ற பின்பு சுப்ரீம் கோர்ட் வழக்கைப் பட்டியலிட்டு விசாரணையைத் துவங்கும். கடைசியாகச் செபி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications