அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி முடித்து ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி 24 பரிமாற்றத்தில் 22 பரிமாற்றங்களின் விசாரணையை முடித்து அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது. இந்த விசாரணை அறிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்க இருக்கும் காரணத்தால் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த சில தகவல்களை ரெயூட்டர்ஸ் வெளியிட்டு உள்ளது.
செபி அமைப்பு தனது விசாரணையில் எதை கண்டுப்படித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டுமே தெரிவித்துள்ளது. முழுமையான விபரம் இன்று நடக்கும் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் தெரிய வரும்.

இந்த நிலையில் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை செபியின் விசாரணையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் செபிக்கு அளிக்க வேண்டிய தகவல்களில் விதிமீறல்களையும், வெளிநாட்டு நிறுவனங்களில் இருக்கும் பங்கு விபரம் குறித்தும் மறைத்துள்ளதை கண்டுப்படித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத 2 அதிகாரிகள் தெரிவித்ததாக ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
விசாரணையின் இறுதியில் அதானி குழுமம் செய்த இந்த விதிமீறல்களுக்கு அதிகப்படியாக பணமாக அபராதம் விதிக்கப்படுமே தவிர பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்படாது என எதிர்பார்ப்பதாக பெயர் வெளியிட விரும்பாத 2 அதிகாரிகள் தெரிவித்ததாக ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்து செபியின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இன்று செபி அறிக்கை மீது விசாரணை நடக்க உள்ளது, ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அதிகப்படியாக 1 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications