அதானிக்கு 750 மில்லியன் டாலரை தூக்கிக் கொடுத்த அப்பல்லோ நிறுவனம்.. என்ன காரணம் தெரியுமா?

பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் நிறுவனர் ஆவார். இவர், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பணக்காரராகவும், உலகளவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராகவும் உள்ளார். அதானி குழுமம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி, பசுமை எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் பல துறைகளில் செயல்படுகிறது. அதானி குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளராகவும் உள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் அதானி குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தொழிலதிபர் கௌதம் அதானியின் விமான நிலைய ஹோல்டிங்ஸ்-இன் துணை நிறுவனமான மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (Mumbai International Airport Ltd), அப்பல்லோ நிறுவனத்தின் மேலாண்மை திட்டங்கள் மற்றும் பிற நீண்டகால முதலீட்டாளர்களால் தலைமை வகிக்கும் குழுவிடமிருந்து $750 மில்லியன் (அமெரிக்க டாலர்) முதலீட்டை பெற்றுள்ளது என்று அமெரிக்க தனியார் மூலதன குழுமம் தெரிவித்துள்ளது. மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் என்பது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமான Chhatrapati Shivaji Maharaj International Airport (CSMIA)-யை இயக்குகிறது.

அதானிக்கு 750 மில்லியன் டாலரை தூக்கிக் கொடுத்த அப்பல்லோ நிறுவனம்.. என்ன காரணம் தெரியுமா?

இந்த நிதி 4 ஆண்டு கால senior secured notes மூலம் முன்னதாக எடுத்த கடன்களை மீள்பணமீட்பு (refinance) செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதி அமைப்பில் $250 மில்லியன் வரை கூடுதல் நிதியை மூலதன செலவுகள் (capital expenditure), திறன் விரிவாக்கம் (capacity expansion) ஆகியவற்றுக்காக அனுமதிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மூலதன வசதியுள்ள உள்கட்டமைப்பு துறையில்
சிறப்பான மற்றும் பெரிய தனியார் முதலீட்டு தரவரிசை பெற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

"இது மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்-க்கான அப்பல்லோ நிறுவனத்தின் இரண்டாவது பெரிய நிதியுதவி" என Apollo நிறுவனத்தின் பங்குதாரர் ஜம்ஷித் எஹ்சானி தெரிவித்துள்ளார். முந்தைய முறையில், அவர்கள் கடனை குறைக்க முயலும் வகையில் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்கினோம். ஆனால், இம்முறை முதலீட்டு தரவரிசை பெற்ற நிதி தீர்வை வழங்குகிறோம். அதானி குழுமத்துடன் இணைந்து, மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்-க்கு அளவோடும், தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட மூலதனத் தீர்வை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு சொத்தை ஆதரிக்கும். மேலும், அதன் அடுத்த வளர்ச்சி கட்டத்திற்கான முதலீட்டு திட்டங்களுக்கும் இது துணைபுரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (AAHL) நிறுவனத்தின் சி.இ.ஓ. அருண் பன்சல் கூறுகையில், "இந்த நிதியுதவி எங்களுக்கு மிகப்பெரிய செயல்பாட்டு நெகிழ்வை வழங்குகிறது. மேலும், மில்லியன் கணக்கான பயணிகளுக்காக விமான நிலைய அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அப்பல்லோ நிறுவனத்தின் ஆதரவும், அதானி குழுமத்தின் செயல்முறை திறன்களும் எங்களை உறுதியான நிலைக்கு கொண்டு வந்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் பிராந்தியத் தலைவர் மற்றும் பங்குதாரரான Matt Michelini கூறுகையில், "உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. ஹைபிரிட் மற்றும் கடன் சார்ந்த நிதி தீர்வுகளுக்கான சந்தையாகவும் உள்ளது. குறிப்பாக, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளுக்கு ஆதரவாகும் வாய்ப்புகளில் மிகுந்த பங்களிப்பு உள்ளது. இந்தியா என்பது ஆசியாவில் உள்ள அப்பல்லோவுக்கான முக்கிய சந்தை ஆகும். இங்கு திறமையான நிறுவனங்கள் மற்றும் தொழில் குடும்பங்களுக்கு நீண்டகால மூலதனக் கூட்டாளியாக நாம் செயல்பட முடியும்" என்று கூறியுள்ளார்.

அப்பல்லோ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த நிதியை மின்சார வாகனங்களுக்கு மாற்றம், ஆற்றல் சிறப்புத் திறன் கொண்ட செயல்பாடுகள், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகள், 2029ஆம் ஆண்டுக்குள் முழுமையான மாசு உற்பத்தி இல்லாத நிலையை அடைவது போன்ற செயல்களுக்கு
மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (MIAL) பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+