இஸ்ரேல் ஹைஃபா துறைமுகம் எங்களுக்கு வெறும் 3% தான்.. அதானி போர்ட்ஸ் கொடுத்த விளக்கம்..!!

இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் மூலம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய வர்த்தகங்கள் அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஐடி முதல் துறைமுகம் வரையில் பல துறையில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.

இந்த போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருக்கும் இந்திய முதலீடுகளின் நிலைமை குறித்து பல கேள்விகள் எழுந்து வரும் வேளையில், பல நிறுவன பங்குகள் இன்று அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது. இதில் முக்கியமான ஒன்றாக கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் துறைமுக வர்த்தக பிரிவான அதானி போர்ட்ஸ் பங்குகள் 4.89 சதவீதம் வரையில் சரிந்தது. காரணம் அதானி போர்ட்ஸ் சொந்தமான ஹைஃபா துறைமுகம் இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது.

இஸ்ரேல் ஹைஃபா துறைமுகம் எங்களுக்கு வெறும் 3% தான்.. அதானி போர்ட்ஸ் கொடுத்த விளக்கம்..!!

இந்த நிலையில் அதானி போர்ட்ஸ் இன்று முக்கியமான விளக்கத்தை தனது முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது. இஸ்ரேலில் நிலவும் மோதலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வணிகத் தொடர்ந்து நடத்தும் திட்டத்துடன் (BCP) தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் திங்கட்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் தெற்கு இஸ்ரேலில் நடந்து வருவதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், அதேநேரம் ஹைஃபா துறைமுகம் வடக்கில் அமைந்துள்ளது. இதனால் போர் பதற்றம் வடக்கு பகுதிகளில் இல்லை, ஆனாலும் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் முழு எச்சரிக்கையுடன் தயாராக இருக்கிறோம். எந்தவொரு நிலையிலும் திறம்பட செயல்பட business continuity plan உருவாக்கியுள்ளோம் என அதானி போர்ட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த கார்கோ அளவில் வெறும் 3 சதவீதம் மட்டுமே ஹைஃபா துறைமுகம் கொண்டு உள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் ஹைஃபா துறைமுகத்தின் கார்கோ அளவை 10 முதல் 12 மில்லியன் டன்னாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. APSEZ நிறுவனத்தின் மொத்த கார்கோ அளவுகள் 370-390 மில்லியன் மெட்ரிக் டன்.

இஸ்ரேல் ஹைஃபா துறைமுகம் எங்களுக்கு வெறும் 3% தான்.. அதானி போர்ட்ஸ் கொடுத்த விளக்கம்..!!

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா துறைமுகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தின் டெண்டரை 1.18 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏலத்தை வென்ற கடோட் குழுமம், அதானி போர்ட்ஸ் உடன் இணைந்தது. இந்த கூட்டணி டிசம்பர் 2022 இல் இஸ்ரேல் அரசிடம் இருந்து ஹைஃபா போர்ட் லிமிடெட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது, இதற்கு இஸ்ரேல் அரசிற்கு அதானி போர்ட்ஸ் சுமார் 785 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.

இஸ்ரேல் நாட்டிற்கு ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது, இந்நாட்டின் கடல் வழியாக செல்லும் மொத்த சரக்கு ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதம் ஹைஃபா துறைமுகத்தில் இருந்து தான் உலக நாடுகளுக்கு செல்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+