இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக வளர்ச்சி மற்றும் இயக்க நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Adani Ports and Special Economic Zone Limited - APSEZ) பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் துறைமுகங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் துறைமுகத்திலும் முதலீடு செய்து, இந்தியாவுக்கும் வெளிநாட்டுக்கும் மத்தியிலான கப்பல் போக்குவரத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுத் தொடர்ந்து துறைமுக துறையில் முதலீடு செய்து வருகிறது.

அதானி போர்ட்ஸ் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இஸ்ரேல் துறைமுகத்தில் முதலீடு செய்த நிலையில், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது.
மே 2 ஆம் தேதி Malacañang அரண்மனையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் ஆர். மாக்கோஸ் ஜூனியர் உடன் அதானி போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் கரண் அதானி சந்தித்த போது பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுகத்தில் முதலீடு செய்வது குறித்தும் நிறுவனத்தின் திட்டம், முதலீட்டு ஆர்வத்தையும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் அதானி போர்ட்ஸ் நிறுவனம், பிலிப்பைன்ஸில் துறைமுக வளர்ச்சிக்காக Bataan என்ற பகுதியில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும், பனாமக்ஸ் (Panamax) கப்பல்களை கையாளக்கூடிய 25 மீட்டர் ஆழமுள்ள துறைமுகத்தை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்ஸில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களை அதிபர் மார்கோஸ் வரவேற்றது மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகத்தில் போட்டியிட பிலிப்பைன்ஸுக்கு இது உதவும் என்றும், குறிப்பாக வேளாண்மை பொருட்களைக் கையாளும் துறைமுகங்களில் கவனம் செலுத்தலாம் என்று பரிந்துரைத்தார் என்று அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானி-க்கு சொந்தமான அதானி குழுமம், ஹிண்டன்பர்க் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் சாதகமான அறிவிப்புகளை வெளியிட்ட பின்பு இக்குழும பங்குகள் தடாலடியாக உயரத் துவங்கியது.
ஹிண்டன்பர்க் விவகாரம் இன்னும் முடியாத நிலையில் அதானி குழுமம் அடுத்தடுத்து கடன் வாங்கி, முதலீடு செய்து, தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் பல நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்திற்காக வங்கிகள், முதலீட்டாளர்களிடம் கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆதானி குழுமத்தின் 6 நிறுவனங்களுக்குப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யிடம் இருந்து நேரில் வந்து ஆஜராகி விளக்கம் கொடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது அதானி குழுமத்திற்குப் பின்னடைவாக அமையும் என கூறப்படும் வேளையில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு செய்தி வந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய துறைமுக வளர்ச்சி மற்றும் இயக்க நிறுவனமாகும். இந்தியாவின் மேற்கு கடற்கரையில் குஜராத்தில் உள்ள முந்த்ரா, துனா, தஹேஜ் மற்றும் ஹஜிரா, கோவாவில் உள்ள மர்முகோவா, மகாராஷ்டிராவில் உள்ள திகி மற்றும் கேரளாவில் உள்ள விழிஞ்சம் ஆகிய துறைமுகங்களையும்...
கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹல்டியா, ஒடிசாவில் உள்ள தம்ரா மற்றும் கோபால்பூர், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கங்கவாரம் மற்றும் கிருஷ்ணபட்ணம், தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என மொத்தம் 15 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை இயக்கி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications