பில்லியனர் ஆன கெளதம் அதானியின் தலைமையிலான அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் திங்கட்கிழமையன்று 1500 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தியுள்ளது.
இன்னும் பெரும் கடனை விரைவில் செலுத்தும் என அறிவித்துள்ளது. அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையானது, அதானி குழும நிறுவனங்கள் மீது ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம் பல மோசடிகளையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்த நிலையில் வந்துள்ளது.
நம்பிக்கை சரிவு
ஜனவரி 24 அன்று இந்த குற்றச்சாட்டு அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 130 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் தொடர்ந்து அதானி குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் இன்றும் சரிவினைக் கண்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீட்கும் பொருட்டு அதானி குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கடனை அடைக்க திட்டம்
அதில் ஒரு முக்கிய நடவடிக்கை கடனை திரும்ப அடைப்பது. குறிப்பாக முன் கூட்டியே கடனை திரும்ப செலுத்தவும் முயற்சி எடுத்து வருகின்றது. அந்த வகையில் அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி போர்ட்ஸ் எஸ்பிஐ மியூச்சுவல் பண்டுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 1500 கோடி ரூபாயினை திரும்ப செலுத்தியுள்ளது.
குறுகிய கால கடன்
இதற்கிடையில் அடுத்த மாதம் செலுத்த வேண்டிய குறுகிய கால கடனான 1000 கோடி ரூபாயினை விரைவில் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறைமுக ஆப்ரேட்டனரான அதானி போர்ட்ஸ், அதற்கு தேவையான மூலதன செலவுக்காகவும், நிதி இருப்புக்காகவும் குறுகிய கால கடன் மூலம் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியினைத் தான் தற்போது முன் கூட்டியேவும் செலுத்த திட்டமிட்டுள்ளது.
நம்பிக்கையை அதிகரிக்கலாம்
இவ்வாறு முன் கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள இந்த கடன் ஆனது நிறுவனத்தின் வணிக செயல்பாட்டிற்காக வைத்திருந்த பணம் அல்லது கையிருப்பாக வைத்திருந்த பணமாகவும் இருக்கும் என தெரிகிறது. இது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட ஒன்று
இந்த அறிவிப்பானது நிறுவனம் 5000 கோடி ரூபாய் கடனை அடைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள நிலையில் வந்துள்ளது. இது அதன் கடனை திரும்ப செலுத்துவது, கடந்த ஆண்டினை காட்டிலும் 3 மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கைகள், ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தான் இப்படி ஒரு நடவடிக்கையும் வந்துள்ளது. எப்படியிருப்பினும் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை இன்று எப்படி?
நிறுவனத்தின் தேவைப்படும் பணம் மறு நிதியளிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது. பணப்புழக்கத்திலும் எந்த பிரச்சனையும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே, அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கிடையில் அதானி போர்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, 1.13% அதிகரித்து, 589.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
மற்ற பங்குகளின் நிலை?
எனினும் அதானி குழுமத்தின் மற்ற பங்குகள் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றன. அதானி கிரீன் பங்கு விலையானது சுமார் 70% ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு சரிவில் காணப்படுகின்றது. எனினும் அதானி பவர், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications