இந்தியாவின் முன்னணி தனியார் துறைமுக வர்த்தக நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிய துறைமுகத்தைக் கட்டும் பணியில் இறங்கியுள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருகிறது அதானி போர்ட்ஸ்.
இந்நிலையில் மனித உரிமைகளை மீறிச் செயல்படும் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள காரணத்தால் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனத்தை அமெரிக்கா தனது S&P டாவ் ஜோன்ஸ் குறியீட்டின் நிறுவன பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது.
மியான்மர் பிரச்சனை
மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி-யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் சதி செய்து நாட்டைக் கைப்பற்றியது. இது மக்கள் மத்தியில் பெரும் புரட்சியாக வெடித்த நிலையில் ராணுவத்திற்கும், மக்களுக்கும் மத்தியில் நடந்த போராட்டத்தில் சுமார் 700க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் விதித்த தடை
இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மியான்மர் ராணுவம் கட்டுப்பாட்டில் இயங்கும் மயான்மர் எக்னாமிக் கார்ப்ரேஷன் மற்றும் மியான்மர் எக்னாமிக் ஹோல்டிங்க்ஸ் பப்ளிக் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது தடை விதித்தது.
துறைமுகம் கட்டும் அதானி போர்ட்ஸ்
இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி போர்ஸ் நிறுவனம் தற்போது யாங்கோன் பகுதியில் மயான்மர் எக்னாமிக் கார்ப்ரேஷன் நிறுவனத்திடம் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கிச் சுமார் 290 மில்லியன் டாலர் மதிப்பிலான துறைமுகத்தைக் கட்டி வருகிறது.
அதானி போர்ட்ஸ் நீக்கம்
இதன் மூலம் மியான்மர் ராணுவ தொடர்புடைய அமைப்புடன் அதானி போர்ட்ஸ் இயங்குகிறது என்ற காரணத்தால் அமெரிக்க S&P டாவ் ஜோன்ஸ் நிறுவன பட்டியலில் இருந்து வருகிற வியாழக்கிழமை நீக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்ட அதானி போர்ட்ஸ் மீது மும்பை பங்குச்சந்தை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதானி போர்ட்ஸ் விளக்கம்
அதானி போர்ட்ஸ் தற்போது கட்டப்பட்டு வரும் யாங்கூன் பகுதி துறைமுகத்தின் நிர்வாகம் மயான்மர் எக்னாமிக் கார்ப்ரேஷன் நிறுவனத்திற்கு வாடகையாகப் பல மில்லியன் டாலர் அளிக்கிறது எனவும், இத்திட்டம் குறித்து அதானி குரூப் அரசு துறை மற்றும் பங்குதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது.
மயான்மர் எக்னாமிக் கார்ப்ரேஷன்
S&P டாவ் ஜோன்ஸ் குறியீட்டில் இருந்து அதானி போர்ட்ஸ் நீக்கப்பட முக்கியக் காரணமாக இருந்தது மியான்மர் ராணுவம் கட்டுப்பாட்டில் இயங்கும் மயான்மர் எக்னாமிக் கார்ப்ரேஷன் மீது விதிக்கப்பட்ட தடை தான். இந்தத் தடை குறித்து அமெரிக்காவின் Secretary of State முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்
இது தொடர்பாக அமெரிக்கச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் மியான்மரில் நடந்துள்ள ராணுவ சரி, வன்முறை ஆகியவற்றுக்கு மயான்மர் ராணுவம் முக்கியக் காரணமாக உள்ளது. இதை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லவே இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
ஜப்பான், தென்கொரியா வர்த்தகத் துண்டிப்பு
அமெரிக்கா, பிரிட்டன் மட்டும் அல்லாமல் ஜப்பான், தென்கொரியா நாடுகளும் மியான்மர் அரசு அமைப்புகளுடன் செய்யப்பட்டும் வர்த்தகங்களை நிறுத்தியுள்ளது.
குறிப்பாகத் தென் கொரியான்வின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான POSCO மியான்மர் எக்னாமிக் ஹோல்டிங்க்ஸ் பப்ளிக் கம்பெனி லிமிடெட் கூட்டணி வைத்துள்ளது, இக்கூட்டணியில் இருந்து தற்போது எப்படி வெளியேறுவது என இந்நிறுவனம் ஆலோசனை செய்து வருகிறது.