இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அதானி குழுமம், பங்களாதேஷ்-ன் தற்காலிக அரசுக்கு 500 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக பங்களாதேஷ் அரசு அதானி குழுமத்திற்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும்..?
அதானி குழுமத்தின் நிலுவைத் தொகை குறித்த எச்சரிக்கை, நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் நாட்டின் தற்காலிக அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆட்சி மாற்றத்தால் ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி, வர்த்தக மந்தநிலை என பல பிரச்சனைகளை பங்களாதேஷ் அரசு எதிர்கொண்டு இருக்கும் வேளையில், 500 மில்லியன் டாலர் கோரிக்கை அந்நாட்டு அரசுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 1,600 MW திறன் கொண்ட கோடா நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து, மின்சாரத்தை அதானி பவர் நிறுவனத்தின் பங்களாதேஷ் நாட்டிற்கு அளிக்கிறது. இதற்கான ஒப்பந்தம், அதானி குழுமத்திற்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் தலைமையிலான அரசுக்கும் மத்தியில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் தற்போது பல விமர்சனங்களைச் சந்தித்தது வருகிறது, முகம்மது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் நாட்டின் தற்காலிக அரசு, அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தம் மிகவும் காஸ்ட்லியான உள்கட்டமைப்பு திட்டமாக உள்ளது என கூறுகிறது.
இதனால் இந்த 500 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையைப் பெறுவதில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது என்று அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளையில் பங்களாதேஷ் அரசின் தற்காலிக நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலுவைத் தொகை பிரச்சினை, பங்களாதேஷ் அரசின் நிதி நிலைமையைப் பாதிக்கிறது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசு, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவியை நாடி வரும் வேளையில் அதானி குழுமத்தின் 500 மில்லியன் டாலர் உண்மையிலேயே பெரும் தலைவலியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பங்களாதேஷ் அரசு, முந்தைய எனர்ஜி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த அரசு, இந்தியா மற்றும் சீனாவுடன் சமநிலையான உறவைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த மும்முனை கூட்டணியில் வெளிப்படையான உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை உருவாக்க முன்வந்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் மின்சாரம் தொடர்பான நிதிசுநை 3.7 பில்லியன் டாலராக உள்ளது. இதில் அதானிக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டுமே 492 மில்லியன் டாலராகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications