சிமெண்ட் துறையில் பேரரசை கட்டியெழுப்பும் முயற்சியில் அதானி குழுமம்

அதானி குழுமத்தால் இந்தியாவில் கோலோச்ச முடியாத துறை என்றால் அது இந்திய சிமெண்ட் துறை ஆகும். சிமெண்ட் துறையில் காலடி வைத்த அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட், ஏசிசி ஆகிய பெரு நிறுவனங்களை கையகப்படுத்தியது.

இந்திய அடிப்படை கட்டமைப்பு மற்றும் மெட்டீரியல் செக்டாரில் முக்கியப் பங்கு வகிக்கும் அதானி குரூப் விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பங்கை வகிக்கிறது. இப்போது சிமெண்ட் துறையில் கண் வைத்துள்ளது.

சிமெண்ட் துறையில் பேரரசை கட்டியெழுப்பும் முயற்சியில் அதானி குழுமம்

ஆனால் அல்ட்ராடெக் சிமெண்ட்டை வைத்திருக்கும் ஆதித்யா பிர்லா குரூப் இந்தத் துறையை ஆளுகிறது. அதானி குரூப்பின் திறனில் பாதிக்கும் மேல் அல்ட்ரா டெக் சிமெண்ட் வைத்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் அதன் உலகளாவிய பங்கில் 150 மில்லியன் டன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக தமிழ்நாட்டிலும் சத்தீஸ்கரிலும் இரண்டு ஆலைகளை தொடங்க இருப்பதாகக் கூறியுள்ளது. நாட்டின் பெரிய சிமெண்ட் உற்பத்தியாளரான அல்ட்ரா டெக் அமெரிக்காவின் உற்பத்தியைவிட 150 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளது.

இது ஐரோப்பிய உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கு ஆகும்.

தனது உற்பத்தித் திறனை 200 மில்லியன் டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுள்ள அல்ட்ரா டெக்கின் தலைவர் குமார் பிர்லா கூறுகையில், நிறுவனத்தில் 13,000 கோடி முதலீட்டை செய்து 21.9 மில்லியன் டன் திறனை தற்போதுள்ள அளவைக் காட்டிலும் உயர்த்த உள்ளதாகக் கூறினார். இதன் மூலம் கிரீன்ஃபீல்டு மற்றும் பிரவுன் ஃபீல்டு பரப்பை அதிகரிக்க உள்ளது.

ஆதித்யா பிர்லா குரூப்பின் பிரதான நிறுவனமான அல்ட்ரா டெக் கடந்த 12 மாதங்களில் 19 மில்லியன் டன் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளது.

மேலும் ரூ.32,400 முதலீடு செய்து 16 இடங்களில் உள்ள ஆலைகள் மூலம் 35 மில்லியன் டன்னுக்கும் மேல் உற்பத்தித் திறனை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அதிகரிக்க உள்ளது.

அல்ட்ரா டெக் தனது காலாண்டு முடிவில் 35 சதவீத லாபத்தை எட்டி ரூ.2259 கோடி வருவாய் ஈட்டியது. அதன் மொத்த லாபம் 2024 முதல் காலாண்டில் 9 சதவீதம் உயர்ந்து ரூ.20,419 கோடியாக உள்ளது.

சிமெண்ட் துறையில் அதானியின் தீவிரமான முயற்சி துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைந்துவரும் அடிப்படைக் கட்டுமானத்துக்கு அதிகளவில் சிமெண்ட் தேவைப்படுகிறது.

சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், வீடுகள் இந்தியாவில் கட்டப்படுகிறது. சிமெண்ட் உற்பத்தியில் உலகளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் அதன் தனிநபர் கொள்முதல் சீனாவின் 1600 கிலோவை ஒப்பிட்டால் 250 கிலோதான் உள்ளது.

இதுதான் அதானி குரூப் தலைவர் கௌதம் அதானியை சிமெண்ட் துறைப்பக்கமாக 2022இல் அழைத்து வந்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக அதானி குழுமம் உள்ளது.

சிமெண்ட் தேவை ஆண்டுக்கு சராசரியாக 1.2 முதல் 1.5 சதவீதம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருக்கும் என்று அதானி கருதுகிறார். இந்த வாய்ப்பை நினைத்து அதானி கடந்த இரண்டு வருடத்தில் அம்புஜா, ஏசிசி, சாங்கி ஆகிய நிறுவனங்களை விலைக்கு வாங்கியுள்ளார்.

2028 நிதியாண்டுக்குள் இந்திய சிமெண்ட் உற்பத்தியில் ஐந்தில் ஒரு மடங்கை இலக்காக வைத்துள்ளார். அம்புஜா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி லிமிடெட் வருடத்துக்கு 77.4 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் திறனைப் படைத்துள்ளது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் 595 மில்லின் டன் ஆகும்.

அதானி குழுவில் திறன் மேம்பாட்டுக்காக சில செயல்படுத்துபவர்கள் உள்ளனர். அது ஏற்கனவே நிலத்தை வைத்துள்ளது. இது மொத்தமாக 8,000 மில்லியன் மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் இருப்புக்களைக் கொண்டுள்ளது.

சுண்ணாம்புக் கல் சிமென்ட் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருளாகும்.

இது நீண்ட கால ஏற்பாட்டின் கீழ் 40 சதவீத ஃப்ளை ஆஷ் தேவைகளைக் கொண்டுள்ளது, இது 2028 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும். .

கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த மாதம் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.8,339 கோடியை செலுத்தி, நிறுவனத்தில் தங்கள் பங்குகளை 66.7% இல் இருந்து 70.3% ஆக உயர்த்தியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் அம்புஜாவை வாங்கிய பிறகு, குடும்பம் அம்புஜாவில் செலுத்தத் திட்டமிட்டிருந்த ரூ. 20,000 கோடி முதலீட்டின் கடைசிப் பகுதியை இது குறிக்கிறது. கூடுதல் மூலதனம் மூலம் அம்புஜாவின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடரவும், வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சிமெண்ட் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பிர்லா, அதானி தவிர, டால்மியா பாரத், ஜேகே சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட் ஆகியவை திறன் விரிவாக்க திட்டங்களை அறிவித்துள்ளன.

இந்தியாவில் சிமெண்டுக்கான தேவை உறுதியான வேகத்தில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதிக்கான அரசின் தலைமையிலான செலவினங்களால் அதிகரிக்கிறது.

ஆர்கானிக் வளர்ச்சியை மட்டும் செய்வதன் மூலம் அதானியால் அல்ட்ராடெக்கை முந்த முடியாது. சந்தைப் பங்கைப் பெறுவதற்கு அதிக கையகப்படுத்துதல்களைச் செய்ய வேண்டும். ஆதித்யா பிர்லா குழுமம் ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் புரமோட்டர் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு, ஓரியண்ட் சிமெண்ட், அதானி குழுமத்துடன் விளம்பரதாரர் பங்குகளை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Story written by: I.jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+