கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் அதானி வில்மர் லிமிடெட் நிறுவனத்தில் தங்களுக்கு சொந்தமான பங்குகளை மொத்தமாக விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து அதானி வில்மர் நிறுவனம் அதானி குழுமத்திலிருந்து வெளியேறி தனி நிறுவனமாக செயல்பட போகிறது. இவ்வாறு தனி நிறுவனமாக பிரிந்தவுடன் நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி வில்மர் நிறுவனம் மேற்கொண்டு உணவு மற்றும் எஃப்எம்சிஜி துறையில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு செயல்படும் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்குஸ் மல்லிக் தெரிவித்துள்ளார் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அதானி வில்மர் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய அங்குஸ் மில்லக் தனி நிறுவனமாக மாறிய பிறகு அதன் பெயர் ஏடபுள்யூஎல் அக்ரி பிசினஸ் (AWL Agri Business ) என பெயர் மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பங்குதாரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் எஃப்எம்சிஜி மற்றும் சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வணிகத்தை அதானி வில்மர் நிறுவனம் கையில் வைத்திருக்கிறது.
1999 ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனமும் சிங்கப்பூரின் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனமாகத் தான் அதானி வில்மரை தொடங்கின.
இந்த நிறுவனம் இந்தியாவில் 23 இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய், கோதுமை மாவு ,அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் அதானி குழுமம் அதானி வில்மர் நிறுவனத்தில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதானி வில்மர் தனி நிறுவனமாக செயல்பட இருக்கிறது .
இந்த நிலையில் தங்கள் நிறுவனம் பெயர் மாற்றி வைக்கப்பட்டு இந்திய சந்தையில் தொடர்ந்து செயல்படும் என்று அங்குஸ் மல்லிக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் நிதியாண்டில் தங்கள் நிறுவனம் பல்வேறு புதிய பொருட்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குயிக் காமர்ஸ் நிறுவனங்களோடு இணைந்து தங்கள் நிறுவனம் புதிய புதிய தயாரிப்புகளை விற்பனை செய்ய இருக்கிறது என கூறியுள்ளார். குறிப்பாக சூப்பர் சேவர் பேக்குகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புற பகுதிகளில் தங்கள் நிறுவன பொருட்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 மார்ச் மாதம் இறுதிக்குள் தங்களின் கிராமப்புற விநியோக நெட்வொர்க்கை இந்தியாவில் 50,000 கிராமங்கள் வரை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications