அதானிக்கு பலப்பரீட்சை.. இலங்கை அரசின் புதிய முடிவு.. மறுபடியும் முதல்ல இருந்தா..?!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், முந்தைய அரசின் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு செய்ய துவங்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் அதானி குழுமத்துடன் இலங்கை அரசு செய்துள்ள காற்றாலை மின்சார ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும் என்று அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த முயற்சிக்கும் இந்தியாவின் 2வது பெரும் பணக்காரருக்கு இது ஒரு பெரிய தடையாக அமைந்துள்ளது.

இலங்கையில் 2 வருடங்களுக்கு முன்பு பணவீக்கம் உச்சக்கட்ட நிலையில் இருந்து போது அந்நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகளவிலான பற்றாக்குறை உருலாக்கி மக்கள் தவித்தனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் பெட்ரோல், டீசல் முதல் அரிசி, பருப்பு வரையில் அதிகப்படியான உதவிகளை செய்தது.

அதானிக்கு பலப்பரீட்சை.. இலங்கை அரசின் புதிய முடிவு.. மறுபடியும் முதல்ல இருந்தா..?!

இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான மோசமான ஆட்சி முறை தான், இதன் எதிரொலியாக மக்கள் புரட்சி வெடித்து அவர் நாட்டை விட்டே வெளியேறி 2022 ஜூலை மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ-வை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியை பிடித்து இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் பெற்று இலங்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஆட்சியில் 2.9 பில்லியன் டாலர் கடனை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்று இலங்கை பொருளாதாரத்தை மீட்டு எடுத்தார்.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோற்றுப்போனார், இந்த தேர்தலில் அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளார். அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு முந்தை ஆட்சி காலக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, நடைமுறைக்கு வந்த விதிகளையும், திட்டங்களையும் ஆய்வு செய்ய துவங்கிய போது தான் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட காற்றாள் திட்டமும் மறுஆய்வுக்கு வந்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டின் திட்டங்களுக்கான மின் கட்டணங்களை முந்தைய அரசு அங்கீகரித்தது பிரச்சனை என்று வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் செவ்வாய்க்கிழக்கு அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய அரசு நவம்பர் 14 அன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்திற்கு புதிய வழிக்காட்டுதலை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க-வின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று தான் இது. தான் ஆட்சியை பிடித்தால் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் நடைபெற்ற மூன்று மூனை போட்டியில் வெற்றி பெற்ற திசாநாயக்க, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலங்கையின் எனர்ஜி துறைக்கும் இத்திட்டம் ஒரு அச்சுறுத்தல் என்று கூறி அதை ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக இருக்கும் கௌதம் அதானிக்கு பெரிய அடியாக இருக்கும். அதானி குழுமம் இலங்கையில் பல உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க வளர்ச்சி நிதி கழகத்தின் ஆதரவுடன் கொழும்பு கண்டெய்னர் கப்பல் துறை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+