ஏஐ தொழில்நுட்பம் தற்போதும் பெரும்பாலான டெக் பணிகளை செய்து வரும் காரணத்தால் அளவுக்கு அதிகமாக இருக்கும் டெக் ஊழியர்களை குறைக்கும் பணியில் தீவிரமாக ஜிசிசி நிறுவனங்கள் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் ஆடை மற்றும் காலணி நிறுவனமான அடிடாஸ், இந்தியாவில் செயல்படும் தனது டெக் பிரிவில் பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளையில் உலகம் முழுவதும் மந்தமான நுகர்வு சந்தையை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், ஐரோப்பா இதில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அடிடாஸ் இந்தியாவில் உற்பத்தி, மார்கெட்டிங், டெக் என பல பிரிவுகளில் பல இடங்களில் தனது அலுவலகங்களை இயங்கி வரும் நிலையில் குருகிராமில் செயல்பட்டு வரும் அடிடாஸ் இந்தியா டெர் ஹாப்-ல் தற்போதைய பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 700 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் பாதி பேர் அதாவது 300 முதல் 350 பேர் வரை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி அதாவது நேற்று நடைபெற்ற இந்நிறுவனத்தின் டவுன் ஹால் கூட்டத்தில் ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்து இந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை பேர், எப்போது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை வெளியிடவில்லை.
இந்த குருகிராம் அலுவலம் 2021ல் துவங்கப்பட்ட நிலையில், இங்கு சாப்ட்வேர் டெவலப்பர்களை தாண்டி, டேட்டா சைன்டிஸ்ட், டேட்டா இன்ஜினியர்ஸ், மார்கெட்டிங், டெஸ்டிங் பிரிவு ஊழியர்கள் என டெக் துறையை சார்ந்த பலர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவனம் துவங்கப்பட்டு வெறும் 5 வருடத்தில் 50 சதவீத ஊழியர்களை இழக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அடிடாஸ் தள்ளப்படுகிறது.
தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களில் ஒரு பிரிவினருக்கு செப்டம்பர் 15ஆம் தேதியே கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள பிற ஊழியர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மேம்பாட்டை ஏஐ மாடல் நிறுவனங்கள் Slow Down செய்தாலும் தொடர்ந்து பணிநீக்கம் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
