அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் சாப்ட்வேர் நிறுவனமான அடோப் முதல் முறையாக இந்தியாவில் ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. அடோப் நிறுவனத்தின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றியுள்ள சாந்தனு நாராயன் பல பெரிய நிறுவனங்களைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தாலும், இதுவரையில் ஒரு இந்திய நிறுவனத்தைக் கூட வாங்கவில்லை.
கிரியேட்டிவ் துறையில் நாளுக்கு நாள் ஏஐ தலையீடு அதிகரித்து வரும் வேளையில் இதை உணர்ந்த அடோப் நிறுவனத்தின் தலைவர் சாந்தனு நாராயன், தனது நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும் ஏஐ பயன்பாட்டைக் கொண்டு வந்துள்ளார். இது அடோபி சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியதுள்ளது.

இந்த நிலையில் ஏஐ துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி பாதைக்கு அடித்தளமிடும் வகையில் சாந்தனு நாராயன் தலைமையிலான அடோப் நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வீடியோ உருவாக்கும் தளமான Rephrase.ai நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ளது.
அடோப் நிறுவனத்தின் சிஇஓ-வாக 2007 முதல் சாந்தனு நாராயன் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக இந்தியாவில் ஒரு நிறுவனம் வாங்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதான் அடோப் நிறுவனத்தின் முதல் ஏஐ ஜெனரேட்டிவ் ஸ்டார்ட்அப் கைப்பற்றலாகும்.
அடோப் நிறுவனம் Rephrase.ai நிறுவனத்தை மொத்தமாக வாங்கியது மூலம் அனைத்து நிறுவனங்களும் அடோப்-ல் சேர உள்ளனர். Rephrase.ai நிறுவனம் ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ மற்றும் ஆடியோ தொழில்நுட்ப நிறுவனம், இது டெக்ஸ்ட் டூ வீடியோ ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது அடோப் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய அளவிலான பலன்களைக் கொடுக்கக் கூடியது மட்டும் அல்லாமல் பல வேலைகளை எளிதாக முடிக்கக் கூடிய பவரை அளிக்கும்.
அடோப் நிறுவனம், Rephrase.ai நிறுவனத்தை மொத்தமாக வாங்கியது அதன் முதலீட்டாளர்களுக்குப் பணமாகக் கொடுத்துச் செட்டில் செய்யவும், நிறுவனர்களுக்குப் பணம் மற்றும் பங்குகள் வாயிலாகச் செட்டில் செய்ய உள்ளது.

ஆஷ்ரே மல்ஹோத்ரா, நிஷீத் லஹோட்டி மற்றும் சிவம் மங்லா ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், இன்று வரை 13.9 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரெட் வென்ச்சர்ஸ் தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் 10.6 மில்லியன் டாலரை திரட்டியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications