டாடா ஸ்கை நிறுவனமாக இருந்து இன்றைய வர்த்தகச் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாறியுள்ள டாடா ப்ளே ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ளது.
DTH சேவை நிறுவனமான டாடா ப்ளே நவம்பர் 29 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடுவதற்காக விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
ஆனால் இந்த விண்ணப்பம் மிகவும் வித்தியாசமான முறையில் புதிய சலுகையில் கீழ் டாடா ப்ளே செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
டாடா குழுமம்
2004 ஆம் ஆண்டு டாடா குழுமம் தனது முக்கிய ஐடி சேவை பிரிவான டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு, டாடா குழுமத்தில் இருந்து வரும் ஐபிஓ டாடா ப்ளே. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
டாடா ப்ளே
டாடா ப்ளே இந்த ஐபிஓ மூலம் சுமார் 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடாகத் திரட்ட உள்ளது.இந்த ஐபிஓ மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களாக Temasek மற்றும் Walt Disney போன்ற நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பாக இருக்கும்.
பங்குதாரர்கள்
தற்போது டாடா ப்ளே நிறுவனத்தில் சிங்கப்பூரின் Temasek ஹோல்டிங்கஸ், Tata Opportunities Fund மற்றும் வால்ட் டிஸ்னி ஆகியவை மட்டுமே 37.8 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் Temasek ஹோல்டிங்கஸ் மற்றும் வால்ட் டிஸ்னி தனது பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி
செபி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் வழங்கும் ரகசிய 'pre-filing' வழியைப் பயன்படுத்தி ஐபிஓ ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செய்த முதல் நிறுவனமாக டாடா ப்ளே உருவெடுத்துள்ளது.
ரகசிய pre-filing
இந்த ரகசிய pre-filing வழி மூலம் ஒரு நிறுவனம் முக்கியமான வர்த்தகத் தகவலைக் பொதுச் சந்தைக்குத் தெரிவிக்காமல் ஐபிஓ-விற்கான ஆவணங்களைப் பங்குச்சந்தை ரெகுலேட்டர் அமைப்பான செபி-யிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.
முக்கியச் சலுகை
ஐபிஓ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் வரை, பொதுவெளியில் இருந்து இந்த ஆவணங்களை வெளியிடுவதை இந்த விதிமுறை அனுமதிக்கிறது. இந்த ரகசிய ஐபிஓ தாக்கல் மூலம் ஒரு நிறுவனத்தின் விண்ணப்பத்தைச் செபி ரகசியமாக ஆய்வு செய்யும், இதேபோல் ஐபிஓ வெளியிடும் சில நாட்கள் முன்பு வரையில் ஐபிஓ விபர அறிக்கையைப் பொது வெளியில் வெளியிடாமல் தக்க வைக்க முடியும்.