நிராகரிப்புகள் ஒருபோதும் இளைஞர்களை கனவுகளை பாலாக்காது. ஆனால், அவை புதிய பாதைகளைத் திறக்கும் என்பதை ஒரு 23 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் நிரூபித்துள்ளார். வடகிழக்கு இந்தியாவின் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த இவர், 500-க்கும் மேற்பட்ட வேலை நிராகரிப்புகளை எதிர்கொண்ட பிறகு, இறுதியில் OpenAI-இன் ஒரு திட்டத்தில் இணைந்து, வீட்டிலிருந்தே மாதம் ரூ.20 லட்சம் சம்பாதித்துள்ளார்.
கணினி அறிவியலில் பி.டெக் முடித்த தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி இவர்தான். படிப்பு முடித்தவுடன், வருடத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளத்துடன் ஒரு சாதாரண வேலையைப் பெற்றார். ஆனால், அந்த வேலை எட்டு மாதங்கள் கழித்துதான் தொடங்கும் என்ற நிலை இருந்ததால், காத்திருக்க விரும்பாமல், உலகெங்கிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட சர்வதேச வேலைகளுக்கு விண்ணப்பித்தார்.

மாதக்கணக்கில் எனக்கு நிராகரிப்பு மட்டுமே கிடைத்தது என்று அவர் தனது வைரலான Reddit பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில், எனக்கு ஒரே ஒரு நேர்காணல் அழைப்பு மட்டுமே வந்தது - எப்படியோ, அந்த ஒரே வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.அந்த ஒற்றை வாய்ப்பு அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. OpenAI-இன் அந்த திட்டம் அவருக்கு மிகப்பெரிய நிதி சுதந்திரத்தையும், உலகளாவிய பணி அனுபவத்தையும், மேலும், பெரிய கனவுகளைக் காணும் தன்னம்பிக்கையையும் அளித்தது.
வீட்டிலிருந்தே ரூ.20 லட்சம் சம்பாதிக்கலாம்: இந்தத் திட்டம் அவருக்கு மாதந்தோறும் ரூ.20 லட்சத்தை ஊதியமாக வழங்கியது. இது அவரது முதல் வேலைவாய்ப்பை ஒப்பிடும்போது கற்பனை செய்ய முடியாத ஒரு விஷயம். இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததால், அவர் இரவும் பகலும் கடுமையாக உழைத்ததாகவும், ஒரு நாளைக்கு 4-5 மணிநேரம் மட்டுமே தூங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
திறமைகளும், இணைய அணுகலும் இருந்தால், புவியியல் ஒரு தடையல்ல என்பதை இந்த வீட்டிலிருந்தே வேலை செய்வது எனக்கு உணர்த்தியது என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
புதிய தொழில்முனைவோராகப் பயணம்: ஓபன்ஏஐ திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், அந்த இளைஞனின் பயணம் அத்துடன் நின்றுவிடவில்லை. வெறும் 23 வயதில், அவர் இப்போது தனக்குச் சொந்தமாக ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கி வருகிறார்.
சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர் ஒரு நேரடியான ஆலோசனையை வழங்குகிறார்: போதுமான அளவுக்கு திருப்தி அடையாதீர்கள் (Don't settle). எல்லா இடங்களிலும் விண்ணப்பியுங்கள், பொது வெளியில் உங்களைக் கட்டமைத்துக் கொள்ளுங்கள், விடாமுயற்சியுடன் நெட்வொர்க்கிங்கை உருவாக்குங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த இளைஞனின் கதை, விடாமுயற்சி மற்றும் சரியான திறமைகள் இருந்தால், சிறிய நகரங்களைச் சேர்ந்த மாணவர்களும் உலகளாவிய வாய்ப்புகளில் நுழைய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications