மும்பை: கர்நாடக மாநிலம் பெங்களூருவை தொடர்ந்து தற்போது மும்பை நகரமும் தண்ணீர் பிரச்சனையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த கோராய் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

அண்மையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுமக்களும், அங்கே அலுவலகங்களை அமைத்துள்ள நிறுவனங்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின. பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதே போல மும்பை நகரிலும் தண்ணீர் பிரச்சனை தலை தூக்க தொடங்கியுள்ளது. மும்பை மாநகராட்சியின் கீழ் வரக்கூடிய கோராய் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய 5 ஆயிரம் குடும்பங்கள் தண்ணீரின்றி தவித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் கோராய் கிராமத்தை சேர்ந்த மக்கள் லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.
அடிப்படைத் தேவைகளுக்கான தண்ணீரை கூட லாரிகளில் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதற்காக ஒரு குடும்பம் ஒரு 7000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
லாரிகளில் தண்ணீர் வேண்டும் என முன்பதிவு செய்தாலும் தங்களுக்கு உரிய நேரத்தில் அவை கிடைப்பதில்லை என்றும், தற்போது தண்ணீருக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மும்பையில் உள்ள கோராய் கிராமத்தை தவிர நாசிக் பகுதியிலும் கடந்த சில நாட்களாக தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.
குறிப்பாக நாசிக் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நாசிக் முனிசிபாலிட்டி வேறு இடங்களில் இருந்து குடிநீரை வாங்கி டேங்கர் லாரிகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த தண்ணீர் பிரச்சனையானது அதிகரிக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாசிக் பகுதிக்கு தேவையான தண்ணீர் கங்காபூர் அணையிலிருந்து திருப்பி விடப்படுவது வாடிக்கை. ஆனால் வேளாண்மை உள்ளிட்ட தேவைகளுக்காக தண்ணீர் திருப்பி விடப்பட்டது மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
புனேவிலும் இதே சூழல் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகள் வற்றி போய் விட்டதால் மக்கள் லாரிகளில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் ஏப்ரல் 24ஆம் தேதி வரை மும்பை நகரம் முழுவதும் குடிநீர் வினியோகம் 5% குறைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல் டெல்லியில் குளிக்க மற்றும் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஷாஹதாரா பகுதியில் (Shahdara) உள்ள விஸ்வாஸ் நகர் (Vishwas Nagar) பகுதிவாசிகள் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் புகார்கள் அளிக்கப்பட்ட பிறகு, டெல்லி ஜல் நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கடந்த இரண்டு மாதங்களில் இந்த பகுதிக்கு தினசரி 20,000 முதல் 35,000 லிட்டர் வரை தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
story written by: Devika
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications