உலகிலேயே 200 பில்லியன் டாலருக்கும் (16 லட்சம் கோடி) அதிகமான சொத்து மதிப்பு கொண்ட மூன்றாவது நபர் என்ற பெருமை பேஸ்புக் நிறுவனர் மற்றும் மெடா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பர்கிற்கு கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் 200 பில்லியன் டாலர்களைக் கொண்ட பணக்காரர்கள் என்ற பிரிவு உண்டாக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க், மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகிய இரண்டு பேர் மட்டுமே உலகிலேயே 200 பொல்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட நபர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தனர்.

இந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய மார்க் ஜூக்கர்பர்க். நடப்பு ஆண்டில் மட்டும் இவர் கூடுதலாக 72.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தினை சேர்த்துள்ளார்.
ப்ளூம்பெக் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மார்க் தான் நடப்பாண்டில் அதிக சொத்து சேர்த்த பெரும் பணக்காரராக இருக்கிறார. நடப்பு ஆண்டில் 72.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக சேர்த்ததன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
எனவே 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டு மூன்றாவது நபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. அடுத்தபடியாக என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹூவாங் நடப்பாண்டில் தன்னுடைய சொத்தில் கூடுதலாக 58 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார்.
தற்போதைய சூழலில் உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நபராக எலன் மஸ்க் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலர்கள் ஆகும். 2ஆவது இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இவர் 216 பில்லியன் டாலர்கள் கொண்டுள்ளார். தற்போது மூன்றாவது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க் இருக்கிறார்.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் எல்விஎம்ஹச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னாட் அர்னால்ட் 200 பில்லியன் சொத்துக்கள் கொண்ட தனி நபர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவருடைய நிறுவனத்தின் பங்கு மதிப்பு நடப்பாண்டில் சுமப்பது 16 சதவீதம் குறைந்தது , இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர்கள் என சரிவடைந்தது.
மார்க் ஜூக்கர்பர்க்கிற்கு நடபாண்டில் கிடைத்த சொத்தின் பெரும் பகுதி மெட்டா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்ததன் மூலமே கிடைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மெட்டா நிறுவனத்தை தொடங்கிய போது மார்க் ஸக்கர்பர்குக்கு 1 டாலர் மட்டுமே ஊதியமாக கிடைத்தது.
தற்போது ஊதியம் மட்டுமில்லாமல் மெட்டா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளுக்கும் இவர் உரிமையாளராக இருக்கிறார் .மெட்டா நிறுவனத்தின் 345 மில்லியன் பங்குகள் இவருக்கு சொந்தமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நடப்பு ஆண்டில் அவருக்கு 24.4 மில்லியன் டாலர்கள் ஊதிய தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications