சென்னையில் கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. அப்போது திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கே குடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் தவிக்கின்றனர். வடசென்னை பகுதியில் அமைந்தகரையில் நெல்சன் சேம்பர் அப்பார்ட்மெண்ட் என்ற ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பிளாட்டுகள் உள்ளன. இதில் சுமார் 600 பேர் வசிக்கின்றனர்.

கடந்த 15ஆம் தேதி பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் திடீரென விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அங்கே குடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர். காலை திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும் அதனை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த போது குடியிருப்பின் ஒரு பகுதி உள்வாங்கி, அடித்தளங்களில் விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் அருகிலுள்ள கூவம் நதி கால்வாய்க்கும் இடையே ஒரு உயர் அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுவே தங்களுடைய கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்படுவதற்கு காரணம் என அங்கே குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தொடர் மழை காரணமாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இருந்த ஒரு சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதனை அடுத்து தான் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்திற்கான கட்டுமான பணி தொடங்கியது முதலே தங்களுடைய குடியிருப்பில் இருக்கும் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தாங்கள் அச்சப்பட்டதை போலவே தற்போது நிகழ்ந்துவிட்டது என்றும் இங்கே குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கூவம் நதி கால்வாய் அமைப்பிற்கு அருகிலேயே ஆபத்தான பகுதியில் இந்த உயரடுக்கு கட்டிடம் கட்டப்படுவதாக புகார் கூறுகின்றனர். இதனிடையே அந்த கட்டுமான நிறுவனம் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் சேதங்களை சீர்ப்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளது .
இருந்தாலும் இந்த உயர் அடுக்கு கட்டிடத்தால் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய குடியிருப்புகளுக்கு ஆபத்துதான் என கூறும் இந்த குடியிருப்புவாசிகள், ஐஐடி கல்வி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து இங்கே ஆய்வு நடத்த வேண்டும் என்கின்றனர்.
இந்த உயர் அடுக்கு கட்டிடத்தினால் தங்களுடைய குடியிருப்புகளுக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications