இந்தியாவில் கொரோனா பாதிப்புக் காரணமாகப் போடப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு மே மாதம் முதல் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையில் சிறப்பான வளர்ச்சி அடைந்த வரு காரணத்தால் வேலைவாய்ப்புப் பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்தது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் முதல் முறையாக மே மாதத்திற்குப் பின் குறைந்துள்ளது. இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் அனைத்து துறைகளும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுக் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் நிலையில். முதலீட்டுச் சந்தையைப் பாதிக்கும் வகையில்ல வேலைவாய்ப்புகள் அளவீடுகள் பாதித்துள்ளது.
இந்திய வேலைவாய்ப்பு சந்தை
லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்ட மே மாதத்திற்குப் பின் இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வெறும் 4 மாத காலகட்டத்தில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.
இதன் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மே மாத்திற்குப் பின் முதல் முறையாக அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு அளவீட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.
5.5 லட்சம் வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 5.5 லட்சம் சரிந்து இம்மாத வேலைவாய்ப்பு அளவீடு 37.8 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 38 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் சரிவு
பண்டிகை காலம் என்பதால் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக வேலைவாய்ப்புச் செய்யத் தயாராக 1.2 கோடி பேர் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் மாதம் 5.5 லட்ச வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளது.
இது தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டு இறுதியில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1 சதவீதம் வரையில் சரியும் எனக் கணக்கிடப்படுகிறது.
அமெரிக்கா பிரிட்டன்
கொரோனா தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தொற்று எண்ணிக்கை 1 கோடியை அடையும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் வியாழக்கிழமை பிரிட்டன் அரசு கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் முழுமையான லாக்டவுன் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2 வரையில் உணவகங்கள், பார் ஆகியவை மூடப்பட உள்ளது. மேலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை சேவைகள் கிடைப்பதிலும் பாதிப்பும் ஏற்படும்.
வேலைவாய்ப்பு சந்தை
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் கொரோனாவால் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலை இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவால் தடுமாறிக்கொண்டு இருக்கும் வேளையில் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்திய மக்களின் முக்கியமான பண்டிகை என்பதால் மக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை உள்ள நிலையில் பல மாநிலங்கள் பட்டாசு மற்றும் விழா கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம்
இக்காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் வேலைவாய்ப்பு சந்தை மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications