உலகளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. இதன் காரணமாக ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
இதற்கிடையில் வளர்ச்சியினை தக்கவைத்துக் கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.
முன்னதாக மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தலை மெதுவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
மெதுவாக பணியமர்த்தல்
இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களில் 1800 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சர்வதேச அளவில் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆக இருந்து வரும், கூகுள் நிறுவனமும் தங்களது பணியமர்த்தலை குறைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பணியமர்த்தலை குறைக்கிறோம்
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை கராணமாக இந்த முடிவை எடுத்துக் கொள்வதாக கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
சமீபத்தில் இது குறித்து சுந்தர் பிச்சை அனுப்பிய மெயிலில் நடப்பு நிதியாண்டில் ஊழியர்களை புதியதாக பணிக்கு எடுப்பதை குறைக்க இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
ஆப்பிள்
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை அடுத்து தற்போது ஆப்பிள் நிறுவனமும் பணியமர்த்தலை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இப்படியொரு நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கையினால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில பதவிகள் இல்லை
அதோடு சில பதவிகளை தற்போது நிரப்பாது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மென்டட் ரியாலிட்டி - மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆரக்கிள் நிறுவனம்
இது தவிர அமெரிக்காவின் மற்ற சில டெக் நிறுவனங்களும் தங்களது பணியமர்த்தலை குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் 1 பில்லியன் டாலர் செலவினை குறைக்கவுள்ளதாகவும் மீடியா தகவல்கள் கூறுகின்றன. ட்விட்டர் நிறுவனமும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெதுவாக பணியமர்த்த திட்டம்
நிவிடியா, ஸ்னாப், உபெர், ஸ்பாட்டிபை, இன்டெல் மற்றும் சோல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் மெதுவான பணியமர்த்தலை குறைக்க உள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications