மத்திய அரசு வருமான வரியில் இருந்து ரேஷன் கார்டு வரையில் அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களைக் களையும் வண்ணம் ஆதார் எண் உடன் வாக்காளர் அடையை இணைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது.
நாளுக்கு நாள் ஆதார் எண் பல முக்கியமான விஷயங்களுக்குக் கட்டாயமாகி வருவதால் அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இந்தியாவில் வாக்காளர் பட்டியலை வலுப்படுத்தவும், வாக்களிக்கும் செயல்முறையை மேம்படுத்தவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரம் பெறவும், போலி வாக்காளர்கள் மற்றும் அட்டையைப் பயன்பாட்டில் இருந்து நீக்கவும் 4 முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது.
4 முக்கிய மாற்றங்கள்
தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 4 முக்கிய மாற்றங்களை மத்திய அரசு ஏற்று விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக வாக்காளர் அட்டை அல்லது தேர்தல் அட்டை ஆகியவற்றுடன் ஆதார் எண்-ஐ டிஜிட்டல் முறையில் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது.
வரி ஏய்ப்பு
இந்தியாவில் வரி ஏய்ப்பு அதிகமாக நடந்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் வண்ணம் மத்திய அரசு வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, ஆதார் எண் என அனைத்தையும் இணைத்தது மூலம் வருமான வரித்துறைக்கு அதிகப்படியான தரவுகளும், ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தற்போது கிடைத்துள்ளது.
வாக்காளர்கள் பட்டியல்
இதேபோல் தேர்தல் மற்றும் வாக்காளர்கள் பட்டியலை சீர்படுத்த ஆதார் மாற்றும் வாக்காளர் அட்டை இணைப்பு பெரிய அளவில் உதவும் எனத் தேர்தல் ஆணையம் நம்புகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்பைத் தனிநபர் தகவல் பாதுகாப்பு சார்ந்து கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளதால், ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பைக் கட்டாயமாக்கவில்லை.
4 முறை இணைப்பு
இதன் மூலம் தானாக முன்வந்து வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும் என்றால் ஜனவரி 1ஆம் தேதி முதல் வருடத்திற்கு 4 முறை குறிப்பிட்ட நாட்களில் இணைக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தற்போது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இணைக்க வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications