தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கக் கூடாது என்ற நோக்குடன் தொழிற்சாலைகள் அதிகளவிலான பாதுகாப்புடன் இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மிகவும் முக்கியத் தொழிற்துறையான ஆட்டோமொபைல் துறை சார்ந்த பல முன்னணி நிறுவனங்களில், கொரோனா தொற்று கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் வாயிலாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிறது.
ரெனால்ட் நிசான் தொழிற்சாலை
திங்கட்கிழமை சென்னையில் இருக்கும் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையின், ஊழியர்கள் அமைப்புத் தொழிற்சாலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை முழுமையாக நிர்வாகம் எட்டாத நிலையில் ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கம் புதன்கிழமை முதல் பணி வர மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் எவ்விதமான இடைக்காலத் தளர்வுகளும் அளிக்காத நிலையில், ஊழியர்களை இந்தக் கொரோனா காலத்தில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம்
இதேபோல் ஹூண்டாய் நிறுவனத்திலும் ஊழியர்களுக்கான பாதுகாப்புப் பிரச்சனை எழுந்த வேளையில், ஹூண்டாய் நிர்வாகம் ஊழியர்களின் பாதுகாப்புக்காக 5 நாள் தற்காலிகமாகத் தொழிற் சாலையை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மே 25 முதல் மே 29 வரையில் தொழிற்சாலை இயங்காது.
ராயல் என்பீல்டு தொழிற்சாலை
இதைத்தொடர்ந்து நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாகச் சென்னையில் இருக்கும் 3 தொழிற்சாலையையும் மே 27 முதல் மே 29 வரையில் 3 நாட்கள் முழுமையாக மூடுவதாகத் தானாக முன்வந்து அறிவித்துள்ளது.
ஊழியர்களின் கோரிக்கை
மேலும் மூடப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் நிறுவனத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது இல்லை என்றும், பணியாற்றும் போது அளிக்கப்படும் கொரோனா பாதுகாப்பு, ஊழியர்கள் அளித்துள்ள கொரோனா தொற்றுக்கான மருத்து உதவிகள் போதுமானதாக இல்லை என வருந்துகின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications