இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் சில நாட்களுக்கு முன்பு தனது டிசிஎஸ் நிறுவனத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், முறைகேடான விஷயங்களை செய்ததற்காகவும் 6 ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், 6 வேலைவாய்ப்பு நிறுவனங்களை தடையும் செய்தது.
இந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் அடுத்த அதிரடி அறிவிப்பு டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அவர்களிடம் இருந்து வந்துள்ளது. டாடா குழுமத்தின் முதுகெலும்பாக இருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நெறிமுறைகளை மீறிய காரணத்திற்காக சுமார் 35 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறுகையில் டாடா ஸ்டீல் நிர்வாகம் சுமார் 38 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் 35 பேர் நிறுவன நெறிமுறைகளை மீறிய பிரச்சினைகள் காரணமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத தவறுகளை செய்த காரணத்திற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மீதமுள்ள மூன்று பேர் தவறான பாலியல் நடத்தை காரணமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு டாடா ஸ்டீல் நிறுவன பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக டாடா சன்ஸ் தலைவரும், டாடா ஸ்டீல் சேர்மன் ஆன என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
பல்வேறு whistleblower புகார்கள் அடிப்படையில் ஆய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டு பாலியல் புகார்கள் முதல் நிறுவன நெறிமுறை மீறல்கள் வரையில் தவறுகள் நடந்ததை உறுதி செய்த பின்பு 38 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது பொதுவாக நடப்பது என்றாலும் அடுத்தடுத்து பணிநீக்கம் என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களுக்கு தங்களுடைய குறைகளை பதிவிட உரிமை உள்ளது. இதன் படி டாடா ஸ்டீல் நிர்வாகம் கடந்த நிதியாண்டு மட்டும் 875 புகார்களை பெற்றுள்ளது, இதில் 158 புகார்கள் Whistleblowers கொடுத்த புகார், 48 புகார் பாதுகாப்பு தொடர்பானது, 669 புகார் HR மற்றும் இதர பிரச்சனைகளை சார்ந்தது என சந்திரசேகரன் தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications