இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் சில நாட்களுக்கு முன்பு தனது டிசிஎஸ் நிறுவனத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், முறைகேடான விஷயங்களை செய்ததற்காகவும் 6 ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், 6 வேலைவாய்ப்பு நிறுவனங்களை தடையும் செய்தது.
இந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் அடுத்த அதிரடி அறிவிப்பு டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அவர்களிடம் இருந்து வந்துள்ளது. டாடா குழுமத்தின் முதுகெலும்பாக இருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நெறிமுறைகளை மீறிய காரணத்திற்காக சுமார் 35 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறுகையில் டாடா ஸ்டீல் நிர்வாகம் சுமார் 38 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் 35 பேர் நிறுவன நெறிமுறைகளை மீறிய பிரச்சினைகள் காரணமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத தவறுகளை செய்த காரணத்திற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மீதமுள்ள மூன்று பேர் தவறான பாலியல் நடத்தை காரணமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு டாடா ஸ்டீல் நிறுவன பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக டாடா சன்ஸ் தலைவரும், டாடா ஸ்டீல் சேர்மன் ஆன என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
பல்வேறு whistleblower புகார்கள் அடிப்படையில் ஆய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டு பாலியல் புகார்கள் முதல் நிறுவன நெறிமுறை மீறல்கள் வரையில் தவறுகள் நடந்ததை உறுதி செய்த பின்பு 38 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது பொதுவாக நடப்பது என்றாலும் அடுத்தடுத்து பணிநீக்கம் என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களுக்கு தங்களுடைய குறைகளை பதிவிட உரிமை உள்ளது. இதன் படி டாடா ஸ்டீல் நிர்வாகம் கடந்த நிதியாண்டு மட்டும் 875 புகார்களை பெற்றுள்ளது, இதில் 158 புகார்கள் Whistleblowers கொடுத்த புகார், 48 புகார் பாதுகாப்பு தொடர்பானது, 669 புகார் HR மற்றும் இதர பிரச்சனைகளை சார்ந்தது என சந்திரசேகரன் தெரிவித்தார்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications