இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்வு கடந்த சில நாட்களாக பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் பருவ மழை அடுத்தடுத்து பெய்தாலும் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை, இதோடு பல அணைகள் வறண்டு போனதோடு, நீர் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரும் போதே அதிகப்படியான விலைக்கு வருவதால் தக்காளி மட்டும் அல்லாமல் பெரும்பாலானவற்றின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

இந்தியாவில் சில பகுதிகளில் மிளகாய் மற்றும் இஞ்சி விலை கிலோ 400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை-யில் பச்சை மிளகாய் விலை கிலோ 100 ரூபாயாக மட்டுமே இருக்கும் வேளையில், கொல்கத்தாவில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியின் விலை 350 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் கடந்த சில நாட்களாக சந்தைக்கு வரும் மிளகாய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன என கோயம்பேடு மொத்த விலை சந்தை வியாபாரி டி முத்துக்குமார் ஈடி-யிடம் தெரிவித்துள்ளார். சென்னையின் ஒரு நாள் தேவை 200 டன் மிளகாய், ஆனால் தற்போது வெறும் 80 டன் மட்டுமே வருகிறது.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதி மிளகாய் தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மூலம் ஈடுசெய்யப்பட்டு வருகிறது, இப்படியிருக்கும் வேளையில் இந்த மாநிலத்திலேயே விளைச்சல் குறைந்து தமிழ்நாட்டுக்கான வரத்து குறைந்துள்ளதால் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
கெல்கத்தாவில் மிளகாய் விலை ரீடைல் சந்தையில் கிலோவுக்கு 400 ரூபாய் வரையில் உயர காரணம், சப்ளை டிமாண்ட் பிரச்சனை தான். சந்தைக்கு போதுமான அளவு மிளகாய் வரத்து இல்லை என்பதால் விலை அதிகரித்துள்ளது,
இந்திய மிளகாய் உற்பத்தி சந்தையில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மட்டும் சுமார் 60 சதவீத சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இதேவேளையில் கர்நாடகா 10 சதவீத சந்தை வர்த்தகத்துடன் இந்திய மிளகாய் உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications