2026- 2027 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மூத்த குடிமக்கள் தங்களுக்கு வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு கடன்களுக்கான வரி சலுகைகள் மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்படும் என கூறின.

மற்றொருபுறம் தேர்தலை எதிர்கொண்டு இருக்க கூடிய மாநிலங்களுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அபார அறிவிப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நீண்ட கால வளர்ச்சியை இலக்காக கொண்டும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு துறையினரும் பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .இத்தகைய சூழலில் பட்ஜெட் முடிந்த கையோடு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. புனிதமான தைப்பூச திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும் நல்ல ஆரோக்கியம் , வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசிர்வதிக்கப்படட்டும் என அதில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரும் நிலையில் பிரதமரின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் சிறப்பு கனிம வள தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதிகை மலையில் மலையேற்ற திட்டம், பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலா திட்டம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் இடத்தில் சிறப்பு மையம் ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு அதிவேக ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications