இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் சார்பாக நாட்டில் வறுமையை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைப்பது ஆகவே அண்மையில் வெளியாகி இருக்கும் தரவுகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாட்டில் படிப்படியாக வறுமை குறைந்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.
எஸ்பிஐ அறிக்கை: குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் வறுமை விகிதம் என்பது 4.6% என குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மையில் தான் உலக வங்கி இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு வறுமை விகிதம் என்பது 5.3 சதவீதமாக குறைந்து இருக்கிறது என ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை இருக்கிறது.

உலக வங்கி அறிக்கை: மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் நல்ல பலனை தருவதாக இருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கும் எஸ்பிஐ, அண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள கணிப்பையும் தன்னுடைய அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது. நவீன முறைகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த வறுமை ஒழிப்பு தொடர்பான விவரங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலில் சுட்டிக்காட்டி இருக்கிறது.
26.9 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: இந்தியாவில் அண்மையில் வெளியான வீடுகளின் நுகர்வு செலவின போக்கு ஆய்வறிக்கை என்பன உள்ளிட்ட சமகால தரவுகளை பார்க்கும் போது நாட்டில் வறுமை விகிதம் குறைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் 2011 - 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 34.47 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவே 2023 ஆம் ஆண்டு 7.5 கோடியாக குறைந்திருக்கிறது என்றும் இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 26.9 கோடி மக்களை தீவிர வறுமையில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
4.6% என குறைந்த வறுமை: இதனை சுட்டிக்காட்டி இருக்கும் எஸ்பிஐ 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் தீவிர வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 சதவீதமாக குறைந்திருக்கும் என கணித்திருக்கிறது. வீடுகளின் நுகர்வு செலவின ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு சமகால ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த கணிப்பினை வெளியிடுவதாக எஸ்பிஐ கூறுகிறது.
Modified Mixed Recall Period (MMRP) என்ற மதிப்பீட்டின்படி கிடைத்த தரவுகளை ஆய்வு செய்வதில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications