மோடி அரசின் அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்த நாளில் இருந்து எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.
இதேவேளையில் பல தொழிலதிபர்கள், நிறுவன தலைவர்கள் மோடி அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாடா சன்ஸ் என் சந்திரசேகரன்
டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் திங்களன்று ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இளைஞர்கள் பாதுகாப்புப் படைகளுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பைத் தவிர, டாடா குழுமம் உட்பட தொழில்துறைக்கு மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களையும் இது வழங்கும் என்றார்.
முக்கிய தலைவர்கள்
இதன் மூலம் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் கூட்டு நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி என இத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்போர் பட்டியலில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனும் இணைந்துள்ளார்.
ஒழுக்கமான இளைஞர்களை
"அக்னிபாத் இளைஞர்களுக்கு தேசத்தின் பாதுகாப்புப் படைகளுக்குச் சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு மட்டுமல்ல, டாடா குழுமம் உட்பட தொழில்துறைக்கு மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் கிடைக்கச் செய்யும்" என்று சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ்
அவர் மேலும் கூறுகையில், "டாடா குழுமத்தில் உள்ள நாங்கள் அக்னிவீர்-களின் திறனை அங்கீகரிக்கிறோம் மற்றும் இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்பை வரவேற்கிறோம்." என்றும் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
4 வருட பணி
மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி "அக்னிவீர் " எனப்படும் ராணுவ வீரர்கள் முப்படைகளில் 4 வருட பணிக்கு அமர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 4 வருட பணிக்கு பின்பு இவர்களின் எதிர்காலம் என்ன என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
போராட்டம்
பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மக்களின் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் நாடு முழுக்க 900 ரயில்களுக்கும் மேலாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 80 ரயில் பெட்டிகள் தீ வைக்கப்பட்டு உள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications