ராணுவ காவல் துறையினருக்கான பொதுப் பணிப் பிரிவின் கீழ் பெண் பணியாளர்களுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு, நவம்பர் 1 - 3 முதல் கர்நாடகாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு மற்றும் மாஹே உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தன்னார்வ பெண்களுக்கு, பெங்களூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் மானெக்ஷா பரேட் மைதானத்தில் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு
ராணுவத்தில் ராணுவ போலீஸ் படையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டியில் சேர்வதற்காக இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக வயது தகுதி, கல்வித் தகுதி, மற்றும் பிற விவரங்களை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பெங்களூரு தலைமையக ஆள்சேர்ப்பு மண்டலத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டது.
தகுதிகள் என்ன?
அதன்படி, ராணுவப் பெண் அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2022க்கான வயது வரம்பு 17.5 - 23 ஆண்டுகள். ஆகஸ்ட் 10 முதல் இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே செப்டம்பர் 7 வரை ஆன்லைன் பதிவு திறந்திருக்கும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்காக https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமான பதிவு செய்யப்பட்ட பிறகு அட்மிட் கார்டு அவர்கள் பதிவு செய்த மெயில் ஐடிக்கு அக்டோபர் 12 மற்றும் 13க்குள் அனுப்பப்படும்.
அக்னிவீர் திட்டம் எதற்காக?
கடந்த சில மாதங்களுக்காக மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கப்பல், விமான படை என மூன்று பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் இவர்கள், 17 1/2 வயது முதல் 23 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
4 ஆண்டு பணிக்கு பிறகு
இந்த அக்னி வீரர்களில் 25% பேர் வழக்கமான பணிகளுக்கு (Regular cadre) கீழ் கொண்டு வரப்படுவார்கள். இந்த 4 ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவ நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு?
முதல் ஆண்டில் சம்பளம் - ரூ.30,000, பிடித்தம் போக ரூ.21,000 கிடைக்கும். இதில் அக்னி வீர் கார்ப்பஸ்-க்காக 9000 ரூபாய் செலுத்தப்படும்.
இரண்டாம் ஆண்டில் 33,000 ரூபாய் சம்பளம், கையில் 23,100 ரூபாய் கிடைக்கும். இதில் 9,900 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸிக்கு செல்லும்.
3ம் ஆண்டில் 36,500 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதில் 25,580 ரூபாய் சம்பளம் கையிலும், 10,950 ரூபாய் அக்னி வீர் கார்ப்பஸ் ஆகவும் செல்லும்.
4வது ஆண்டில் 40,000 ரூபாய் சம்பளம் ஆகும். இதில் கையில் 28,000 ரூபாய் சம்பளமும், 12,000 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸ்-க்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அக்னி வீர்ஸ், 4 வருட பணிக்கு பின்பு ரெகுலர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications