பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் நிலவரம் முழுமையாகத் தெரிய வந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ள நிலைில் 2022-23ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் குழு கணித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விவசாயத் துறை பற்றிப் பொருளாதார ஆய்வறிக்கையில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஓமிக்ரான்
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்றால் அதிகம் பாதிப்ப அடையாத மிக முக்கியமான துறைகளில் ஒன்று விவசாயத் துறை. கடந்த இரண்டு வருடத்தில் விவசாயத் துறையின் வேலைவாய்ப்பு, உற்பத்தியில் சில ஏற்ற இறக்கம் இருந்தாலும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தான் உள்ளது.
விவசாயத் துறை வளர்ச்சி
இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. கடந்த ஆண்டு விவசாயத் துறையின் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம், தக்காளி விலை
2021-22ஆம் நிதியாண்டில் சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரையில் அதிகம் பயமுறுத்திய ஒன்று வெங்காயம், தக்காளி மற்றும் இதர காய்கறிகள் விலை தான். இதன் விலை உயர்வுக்கு மிகவும் முக்கியக் காரணம் பருவமழையில் ஏற்பட்ட மாற்றம், தேவைக்கும் குறைவாக இருந்த காய்கறிகளின் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் விலை அதிகரித்துள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
2 வருடமாக இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும், விவசாயத் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் விவசாயத் துறை உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
புதிய விவசாயத் தொழில்நுட்பம்
இந்நிலையில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்து இருக்கும் பிற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காகக் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல் புதிய விவசாயத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
விவசாயக் குடும்ப வருமானம்
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ல், நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2014 இல் 6,426 ரூபாயிலிருந்து 2019 இல் 10,218 ரூபாயாக உள்ளது என்று கூறியது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications