AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மக்கள் வேலை செய்யும் முறை, கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, சுகாதாரப் பாதுகாப்பு பெறுவது மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையை தலைகீழாக மாற்றும் என்று பில் கேட்ஸ் ஒருமுறை கூறினார்.
பில் கேட்ஸ் கூறிய போது பலரும் மிகைப்படுத்திக் கூறுகிறார் என விமர்சனம் செய்தார், ஆனால் OpenAI நிறுவனம் ChatGPT மற்றும் GPT-4 அறிமுகம் செய்த பின்பு செயற்கை நுண்ணறிவு எதையெல்லாம் செய்யக்கூடும் என்பதை கண்டு பலரும் வியப்பு அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சூரிச் என்னும் காப்பீட்டுத் தளத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் Gen-Z பிரிவு மக்கள் உலகளவிலான பணியாளர்கள் பங்கீட்டில் சுமார் 27% பங்கு வகிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெவிக்கிறது.
பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் மற்றும் large language module (LLM) போன்ற முக்கிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது மூலம் எதிர்கால பணியிடத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும். LLM அடிப்படையிலான AI சாட்போட் மனிதர்கள் ஒரு பணியை செய்ய எடுக்கும் நேரத்தில் 10 சதவீதத்தில் முடிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
இந்த நிலையில் ஒரு சாட்போட் மிகவும் எளிதாக வேலைக்கு ஒருவரை நியமிக்க வேண்டுமாயின், ஒரு நபரை தானாக ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு, ஈமெயில் வாயிலாகவே முதல் நிலை தகுதியை சரிபார்க்க முடியும் என்று AI- அடிப்படையிலான SaaS தளமான KarmaV நிறுவனர் மற்றும் சிஇஓ-வான உஜ்ஜல் டி தெரிவித்துள்ளார்.
AI மற்றும் பிளாக்செயின் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிறுவனத்தில் இருக்கும் கடுமையான பணிகளில் ஒன்றான Human Resources பணியை எளிதாக்க முடியும்.

AI- அடிப்படையிலான மென்பொருள் மற்றும் பிளாக்செயின் இணைந்து காலி பணிகளான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல்களை தானாக எழுதி அனுப்புதல், HR பிரிவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை சரிபார்த்தல், ஆராய்ச்சி அறிக்கைகளை எளிதாக்குதல், பணியாளர் சர்வே உருவாக்குதல், சென்டிமென்ச் அனலிசிஸ், ஊழியர்களின் தரவைப் பாதுகாப்பது போன்ற பலவற்றைச் செய்யலாம் என ValueMatrix.ai நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா மாலிக் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது 2030-க்குள் AI சந்தை சுமார் 20 மடங்கு வளர்ச்சி அடைந்து 2 டிரில்லியன் சந்தையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் ஆரம்பம் ChatGPT ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டு 2 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications