சென்னை: 2024ஆம் ஆண்டில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) வளர்ச்சி எங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அதில், இந்தியா முன்னணியில் உள்ளது. மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் லிங்க்டின் (Linkedin) இணைந்து நடத்திய ஆய்வின்படி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய தொழிலாளர்களில் 92% பேர் தங்கள் தினசரி வேலைக்காக AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இது உலக அளவில் சுமார் 75% அதிகமாகும். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சில தொழிலாளர்கள், தங்கள் சக ஊழியர்கள் தங்களை 'சோம்பேறி' (lazy) அல்லது 'ஏமாற்றுபவர்கள்' (frauds) என்று நினைப்பார்களோ என்ற கவலை கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anthropic என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனமும், Asana என்ற பணி மேலாண்மை தளமும், சமீபத்தில் தங்களது 2024ஆம் ஆண்டின் "State of AI at Work" என்ற அறிக்கையை வெளியிட்டன. 5000-திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த கணக்கெடுப்பில், கால் பகுதிக்கு மேற்பட்டவர்கள், தங்கள் வேலையில் AI-ஐப் பயன்படுத்தினால் "சோம்பேறி" என்று கருதப்படுவோமோ என்ற கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கூடுதலாக, 23% பேர் AI கருவிகளைப் பயன்படுத்துவதற்காக "ஏமாற்றுபவர்கள்" என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று அஞ்சுகின்றனர்.

Asana's Work Innovation Lab என்ற நிறுவனத்தின் தலைவர் Rebecca Hinds, CNBC உடனான பேட்டியில், இது போன்ற அச்சம் ஏற்படுவதற்கான காரணம், அந்தந்த ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் AI பயன்பாடு குறித்தத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்காததே என்று கூறியுள்ளார். அதனால் தான் அவர்களை, அவர்களே "சோம்பேறித்தனமானவர்கள்" மற்றும் "ஏமாற்றுபவர்கள்" என்ற உணர்வுடன் பார்க்கத் தொடங்குகின்றனர். நிறுவனச் சூழல் AI பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் மற்றும் லிங்க்டின் ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை எடுத்துக்காட்டியுள்ளது. அனுபவத்தை விட AI திறன்களுக்குத் தெளிவான முன்னுரிமை உள்ளது. அந்த ஆய்வின்படி, இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் 80% பேர், அனுபவம் வாய்ந்த பணியாளர்களை விட, AI திறன்களைக் கொண்ட குறைந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்களையே விரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் AI பயன்படுத்துவதால் பிற நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் 54 சதவீதம், தங்கள் நிறுவனத்திற்கு தெளிவான திட்டம் இல்லை என்று தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications