ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பிரிட்டனில் மூன்று மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் கூட கோடிங் எழுதுவது போன்ற பணிகளுக்கு பெருமளவில் தற்போது ஏஐ கருவிகளை சார்ந்து இருக்கத் தொடங்கி விட்டன. இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் பிரிட்டனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 3 மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனக் கூறியுள்ளது. அதே வேளையில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனிபிளேர் இன்ஸ்டியூட் சார்பாக ஆய்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 முதல் 2,75,000 வரையிலான வேலை வாய்ப்புகள் பறி போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதர்கள் செய்து வரக்கூடிய இந்த வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும் வேலைகளாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் என தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட உச்சநிலையை அடைந்த பிறகு இந்த நிலைமை மாறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த புதிய வேலைகள் உருவாகும் என்பதால் இளைஞர்கள் அதற்காக தயாராக வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதன் மூலம் முதலில் மேலாண்மை மற்றும் கிளர்க் அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பான பணிகள், பேங்கிங் மற்றும் பைனான்ஸ் தொடர்பான வேலைகள் அதிகளவில் தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாறும் எனவும், இதனால் பெரிய அளவில் மனிதர்களின் வேலை மிச்சமாகும் என்றும் அதில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை வேலைகளை பறிக்கத்தான் போகிறது, ஆனால் அதற்கு மாற்றாக வேலைகள் உருவாகும் என்பதே இந்த அறிக்கையின் சாராம்சமாகும். ஒரே மாதிரியான வேலைகள் ஏஐ நுட்பத்தோடு இணைக்கப்பட்டு விடும், அதற்கு மனிதர்கள் தேவைப்படாது, ஆனால் சிக்கலான நடைமுறைகளை கொண்ட வேலைகள் தொடர்ந்து மனிதர்களால் தான் சாத்தியப்படும் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications