கூகுள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை ஏஐ தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. ஆனால் இது நிறுவனங்களுக்கு தான் ஆபத்தை ஏற்படுத்தும் என ஈனாம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு பிரிவு இயக்குநரான ஸ்ரீதர் சிவராம் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான அனுபவம் கொண்டவர்களுக்கும் பிரஷர்களுக்குமான வேலை வாய்ப்புகளை பறிக்கிறது என கூறியுள்ளார். மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் வளர்ச்சி குறித்த தன்னுடைய பார்வைகளை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் ஐடி துறையில் கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களே ஏஐ வருகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். ஐடி துறையில் 30 சதவீதம் பேர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள் மற்றும் பிரஷர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் வேலைவாய்ப்பை தான் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பறித்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு எப்படி இருந்தது என்பதை பாருங்கள் கடந்தாண்டு எந்த நிறுவனமும் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கவில்லை அதற்கு முந்தைய ஆண்டு மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் கூட புதிதாக யாரும் வேலைக்கு எடுக்காமல் ஏற்கனவே இருந்தவர்களை கூட பணிநீக்கம் செய்தன என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறுவனத்தின் செயல்பாடுகளை மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது என சில தலைவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது ஆனால் நீண்ட கால நோக்கில் இது ஐடி நிறுவனங்களுக்கு பிரச்சினையாக தான் முடியும் எனக் கூறியிருக்கிறார். ஏனெனில் மனித வளத்திற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு ஐடி நிறுவனங்கள் சேவைகளை வழங்கும்போது அவர்களுடைய கிளையண்ட்கள் இதுநாள் வரை குறிப்பிட்ட அந்த சேவைக்கு வழங்கி வந்த தொகையை குறைத்து விடுவார்கள் இது ஐடி நிறுவனங்களின் லாபத்தையும் வருவாயையும் பாதிக்கும் கூடும் என கூறுகிறார்.
அதாவது ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் அவை அதிக லாபம் ஈட்டுகின்றன எனக் கூறுவது உண்மை கிடையாது என தெரிவிக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது அதே வேளையில் ஒரு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என கூறுகிறார். ஆனால் இந்த இரண்டில் முதலில் வருவது அச்சுறுத்தல் தான் என தெரிவிக்கிறார். எனவே ஏஐ ஒருங்கிணைப்பில் நிறுவனங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications