இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருமணத்திற்கான வரன் பார்க்கக்கூடிய நிகழ்வுகள் என இரண்டுமே மிகப்பெரிய சந்தை என கூறலாம். நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் முறையும் பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது .
பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும் செயலிகள் வாயிலாகவும் திருமண வரன் பார்ப்பது என்பது மிகவும் எளிதாகி விட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பமும் இந்த மேட்ச் மேக்கிங் துறையில் கால் பதித்திருக்கிறது. பொதுவாக நாம் திருமணத்திற்கு வரன் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் நம்முடைய அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டி இருக்கும். இதனை அடுத்து நமக்கான தேவைகளை குறிப்பிட்டு ஃபில்டர் செய்து வரன் பார்க்க வேண்டும்.

ஆனால் Knot.dating என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய வரன் பார்க்கும் இணையதளம் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் செயல்படுகிறது. சமூக வலைதளங்களில் இது பற்றி தான் பலரும் தீவிரமாக விவாதம் நடத்தி வருகின்றனர். Knot.dating என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திருமண வரன் பார்க்கக் கூடிய தளத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய ஆண்கள் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியுமாம்.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் இளைஞர்களின் வருமானம் , பின்னணி உள்ளிட்டவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு தான் அவர்களுடைய விவரங்களே செயலியில் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இதில் வரன் தேடி பதிவு செய்ய எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இந்த இணையதளம் ஹார்வர்டு பல்கலைகழகம், பிட்ஸ் பிலானி, ஐஐடி, ஐஐஎம், காம்பிரிட்ஜ் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பயின்றவர்களே எங்களின் கிளைண்டுகள் என தெரிவித்துள்ளது.

தீவிரமாக வரன் பார்க்கக் கூடிய நபர்களுக்காகவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என இதன் நிறுவனர்களான ஜஸ்வீர் சிங் மற்றும் அபிஷேக் ஆஸ்தானா ஆகியோர் தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் எலைட் பிரிவினரை குறி வைத்து இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாம். டைம் பாஸுக்காக இல்லாமல் சீரியஸாக வரன் தேடுவோரை இலக்காக வைத்து ஏஐ உதவியுடன் செயல்படும் வகையில் இதனை வடிவமைப்பு செய்துள்ளனர்.
பாரம்பரிய வரன் பார்க்கும் இணையதளங்களில் இருந்து Knot.dating முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. நாம் இந்த செயலி அல்லது இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யும் போது எந்த விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை, இதில் இருக்கும் ஏஐ ஏஜெண்டுடன் சில நிமிட கலந்துரையாடினாலே போதும். நம் தேவைகளை உணர்ந்து அதற்கு பொருத்தமான வரன்களை பார்த்து கொடுக்கும் என ஜஸ்வீர் சிங் தெரிவித்திருக்கிறார்.
ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் ஆண்கள் மட்டுமே இதில் பதிவு செய்யு முடியும் என்பது தான் சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. பலரும் இது பின்னோக்கிய சிந்தனை என கருத்து கூறியுள்ளனர். ஆனால் இதன் நிறுவனர்கள் எலைட் பிரிவினரே எங்களின் இலக்கு என்பதாலும் , மணமகள் குடும்பத்தினருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதாலும் இப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications