செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பல துறையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கும் என பல மாதங்களாக பேசப்பட்டு வந்தாலும், இந்த பாதிப்பு சில வருடங்களுக்கு இருக்காது என பல தரப்பினர் கணித்து வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில், AI மூலம் 4000 பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
சர்வதசே அளவில் இயங்கி வரும் HR நிறுவனமான சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் வெளியிட்ட தனது மாதாந்திர அறிக்கையின் படி, இந்த ஆண்டு மே மாதத்தில் தோராயமாக 4000 பேர் தங்களுடைய வேலையை இழக்க செயற்கை நுண்ணறிவு (AI) காரணம் என அறிவித்துள்ளது.

CGC நிறுவனத்தின் கணக்குகளின் படி மே மாதத்திற்கான மொத்த பணிநீக்கத்தில் 4000 பேரின் பணிநீக்க பங்கீடு 4.9 சதவீதம் ஆகும். இந்த பணிநீக்கம் இந்த துறையில் தான் உள்ளது என குறிப்பிட முடியாத அளவுக்கு அனைத்து துறைகளிலும் உள்ளன என்று இந்நிறுவன அறிக்கைகள் கூறுகிறது.
சமீபத்தில் உலகிலேயே மிகவும் பழமையான மென்பொருள் நிறுவனங்களில் இன்றும் வெற்றிகரமாக இயங்கும் IBM நிறுவனத்தின் CEO-ஆன அரவிந்த் கிருஷ்ணா ஒரு நேர்காணலில் நிறுவனம் 6800 வேலைவாய்ப்புகளை காலப்போக்கில் AI மூலம் படிப்படியாக அகற்றும் என தெரிவித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இதை தொடர்ந்து அமெரிக்காவில் சில முன்னணி செய்தி நிறுவனங்கள் AI சேவைகளை பயன்படுத்தி அதிகப்படியான செலவுகளை குறைக்க முடியும் என்பதை பல பிரிவுகளில் ஆய்வு செய்து தீர்மானத்திற்கு வந்த நிலையில், பலர் பணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்றால் மிகையில்லை.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையில் அதிர்ச்சியூட்டும் வகையில் சுமார் 417,500 பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். 2020 க்குப் பிறகு வேலைவாய்ப்பு சந்தையில் மிகவும் மோசமான ஐந்து மாத காலகட்டமாக உள்ளது.

இந்த போக்கு அடுத்த சில வருடங்களில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட உள்ளது மட்டும் அல்லாமல் பலர் இதனால் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர். குறிப்பாக கீழ் மட்டத்தில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் தங்களுடைய பணியை இழக்க வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications