அமெரிக்காவின் டல்லாஸில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் சித்தார்த் நந்தியாலா, மருத்துவத் துறையில் ஒரு முக்கியமான புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது 'சர்க்காடியான்' (Circadian) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) app-ஆல் , வெறும் 7 நொடிகளில் இதய நோய்களை கண்டறிய முடியும் என்பதால், மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சித்தார்த் நந்தியாலாவின் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரை சேர்ந்தது. தற்போது, அவர்கள் அமெரிக்காவின் டல்லாஸில் வசித்து வருகின்றனர். இளம் வயதிலேயே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் அதிக ஆர்வம் காட்டிய சித்தார்த், Oracle மற்றும் ARM நிறுவனங்களின் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம், உலகின் மிகக் குறைந்த வயது AI சான்றிதழ் பெற்ற நிபுணர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
சித்தார்த் உருவாக்கிய 'சர்க்காடியான்' app, ஸ்மார்ட்போனின் மூலம் இதய ஒலிகளை பதிவு செய்து, அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பகுப்பாய்வு செய்து, இதய நோய்களின் இருப்பை 7 நொடிகளில் கண்டறிய முடியும். இந்த appன் துல்லிய விகிதம் 96% க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை, அமெரிக்காவில் 15,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும், இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
சித்தார்த் உருவாக்கிய app, ஆந்திரப் பிரதேச அரசால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் (Guntur Government General Hospital) இந்த app வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சித்தார்தின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை அறிந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
சித்தார்தின் அற்புதமான திறமையையும், மனித குலத்தின் நலனுக்கான அவரது தொழில்நுட்ப சிந்தனையையும் கண்டு முதல்வர் நாயுடு மிகவும் ஈர்க்கப்பட்டார். சந்திரபாபு நாயுடு கூறியதாவது, "இந்த இளம் விஞ்ஞானி அனைவருக்கும் ஒரு உத்வேகம். அவரது சுகாதார தொழில்நுட்ப கனவுகளை நனவாக்க ஆந்திரப் பிரதேச அரசு முழு ஆதரவு அளிக்கும்" என்று கூறினார்.
இந்த app, இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதன் மூலம், இதய நோய்களின் காரணமாக ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும். மேலும், இந்த உத்வேகம் மருத்துவச் செலவுகளை குறைத்து, பொதுமக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துகிறது.
சித்தார்த், தனது appஐ மேலும் மேம்படுத்தி, உலகளாவிய அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். அவரது நோக்கம், மருத்துவ சேவைகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வது மற்றும் இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. சித்தார்த் நந்தியாலாவின் இந்த சாதனை, இளம் தலைமுறைக்கு ஒரு பெரும் உத்வேகம். அவரது முயற்சியும், அர்ப்பணிப்பும், மனித குலத்தின் நலனுக்கான அவரது பங்களிப்பும், அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications