உலகம் வேகமாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என்றே கூறலாம். அப்படி இருக்கையில் கூகுள் டீப் மைண்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான டெமிஸ் ஹசாபிஸ் டீனேஜர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் "இப்போதே கற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் பின்தங்கி விடுவீர்கள்!" என்பதுதான்.
டெமிஸ் கூகுள் நிறுவனத்தின் உயர்தர ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுக்கு பின்னால் இருக்கும் ஆராய்ச்சி ஆய்வகமான கூகுள் டீப்மைண்டை வழிநடத்தி வருகிறார். இந்த ஆய்வகத்தில் ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் (AGI) ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. அதாவது மனித நிலையை பகுத்தறியும் திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம்.

உதாரணத்திற்கு எந்திரன் படத்தில் ரோபோட்டுக்கு மனித உணர்வுகளை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படும் விஷயம் கிடைத்துவிட்டால் அந்த ரோபோட் என்னென்ன செய்யும் என்று பார்த்தோம். அப்படித்தான் மனித உணர்வுகள், மனிதனைப் போலவே யோசிக்கும் திறன், மனிதர்களைப் போல கிரியேட்டிவிட்டியுடன் செயல்படும் திறன் ஆகியவற்றை கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தான் இந்த ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ்.
இதை அடைவதற்கு கூகுள் பல முயற்சிகளை செய்து வருகிறது. அதுவும் இந்த ஆய்வகத்தில் தான் செய்யப்படுகிறது. பொதுவாக நாம் தற்போது பயன்படுத்தும் AI தொழில்நுட்பம் பணிகளை செய்வதில் சிறந்த விளங்குகிறது, படங்களை அடையாளம் காண்கிறது, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கும் மொழிபெயர்க்கிறது. ஆனால் இது போன்ற ஏஐ அமைப்புகளுக்கு தங்கள் பயிற்சிக்கு அப்பால் சிந்திக்கவோ அல்லது கற்றுக் கொள்ளவோ முடியாது.
ஆனால் ஆர்டிபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் இந்த விஷயத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இவை மனிதர்களைப் போலவே சிந்திக்கும், மனிதர்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் ஒரு மனிதன் எப்படி எல்லாம் பல்வேறு துறைகளில் தனது அறிவை வைத்து சிக்கல்களை தீர்த்து செயல்படுகின்றனரோ அதேபோல இந்த ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் தொழில்நுட்பமும் செயல்படும்.
சமீபத்தில் நடந்த கூகுள் நிறுவனத்தின் "ஹார்ட் ஃபோர்க்" என்ற பிரபல பாட்காஸ்டில் பேசிய டீப் மைண்ட்-இன் CEO ஹசாபிஸ் இளம் தலைமுறையினருக்கு ஒரு முக்கியமான கருத்தைக் கூறினார். அவர் இளம் வயதினரிடம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் முழுமையாக ஈடுபட ஊக்குவித்தார். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் என்றும் கூறினார்.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் AI தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் சில வேலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதோடு இளைஞர்கள் AI கருவிகளுக்கு சீக்கிரமாக பழகிக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுரைகளை வழங்கினாலும் வெறும் தொழில்நுட்ப அறிவு மட்டுமே போதாது என்றும் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். வெறும் தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி பிற திறன்களிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
2030-ஆம் ஆண்டுக்குள் ஏஐ வேலை சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் சமீப காலமாக கூறி வருகின்றனர். அதற்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்வது அவசியம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications