உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கத்தாருக்கு கூடுதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்களை கத்தாருக்கு இயக்கப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறப்பு விமானங்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறித்த தகவலையும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி
2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் இந்த ஆண்டு நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு கத்தாருக்கான பயணத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை கத்தாருக்கு இயக்க திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா
கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து அக்டோபர் 30 ஆம் தேதி முதல் கூடுதலாக 20 விமானங்களைத் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து தோஹாவிற்கு வாரத்திற்கு 13 விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து வாரத்திற்கு 4 விமானங்களும், சென்னையில் இருந்து வாரத்திற்கு 3 விமானங்களும் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
சென்னை-தோஹா
சென்னை-தோஹா விமான சேவை நவம்பர் 10 முதல் தொடங்கும் என்றும், அதேபோல் ஹைதராபாத்-தோஹா நவம்பர் 11 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் இருந்து தோஹாவிற்கு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 30 முதல் விமானங்கள் இயக்கப்படும். ஏற்கனவே புதுதில்லியில் இருந்து தோஹாவிற்கு தற்போதுள்ள தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கால்பந்து போட்டிகள் நடைபெறும் தேதிகளில் கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
புதிய விமானங்கள்
கத்தாருக்கு சிறப்பு விமானங்கள் இயக்க கூடுதலாக விமானங்கள் வாடகைக்கு பெறப்படும் என்றும், மேலும் தேவை ஏற்பட்டால் புதிய விமானங்கள் வாங்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது. கடந்த மாதம், ஏர் இந்தியா தனது உள்நாட்டு நெட்வொர்க்கில் 14 புதிய விமானங்களை அறிமுகப்படுத்தியது என்பது தெரிந்ததே.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications