டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயண கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான வாட்ஸ் அப் எண்ணையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது .
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 300 ஊழியர்கள் நேற்று திடீரென ஒரே சமயத்தில் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுமுறை எடுத்தனர்.

தங்களது செல்போன்களையும் இவர்கள் சுவிட்ச் ஆப் செய்து விட்டதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் இவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸுக்கு சொந்தமான 85 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் அவதிக்கு ஆளானார்கள்.
இதனிடையே 30 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
விமானம் ரத்து செய்யப்பட்ட பயணிகளும், மூன்று மணி நேரங்களுக்கு மேலாக தாமதமான விமானங்களில் சென்ற பயணிகளும் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்அலாம் அல்லது மற்றொரு தேதியில் தங்களது பயணத்தை செட்யூல் செய்து கொள்ளலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக பயணிகள் +91- 6360012345 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத இந்த சூழ்நிலையில் பயணிகள் எதிர்கொண்ட சிரமத்திற்கு வருந்துவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூறியுள்ளது. இன்றைய தினம் 283 விமானங்களை தங்களது நிறுவனம் இயக்கும் என்றும், தங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஏர் இந்தியாவின் உதவியையும் பெற்று தாங்கள் வழக்கம் போல விமானங்களை இயக்கி வருவதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும் 70க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது, எனவே பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து ஒரு முறை சோதனை செய்து கொள்ள வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் 300க்கும் அதிகமான ஊழியர்கள் விடுமுறை எடுத்ததற்கான காரணம் அவர்களது கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்ட சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications