புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.. பயணிகள் பீதி.. நடந்தது என்ன ?

ஐதராபாத்: இந்தியாவில் விமானங்களில் கோளாறு ஏற்படுவது ,புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்படுவது ,விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது அல்லது பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவது என நாளுக்கு நாள் விமானங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அச்சமூட்டும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

குறிப்பாக ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளாகி விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர மற்ற அனைவருமே உயிரிழந்தனர். இந்த விபத்தினை தொடர்ந்து விமானங்கள் தொடர்பான அனைத்து செய்திகளுமே மக்களிடம் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சூழலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.. நடந்தது என்ன ?

ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸுக்கு சொந்தமான iX110 விமானம் காலை 6.41 மணிக்கு புறப்பட்டது. ஆனால் மீண்டும் 6 57 மணிக்கு இந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திரும்பி தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கே திரும்பி வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தின் புகேட் பகுதியை நோக்கி போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் காலை 6:20 மணிக்கு புறப்பட வேண்டியது ஆனால் 20 நிமிடங்கள் தாமதமாகி 6.41 மணிக்கு தான் புறப்பட்டது. இந்த விமானம் காலை 11. 45 மணிக்கு புகேட்டை அடைந்திருக்க வேண்டும். ஆனால் புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே அது மீண்டும் ஐதராபாத்திற்கு திரும்பி வந்து தரையிறங்கி இருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே பயணி ஒருவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்படுகிறது, பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை என தெரிவித்திருக்கிறது.

நேற்று முன் தினம் தான் டெல்லியில் இருந்து இம்பாலை நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது .அதேபோல டெல்லியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கோவாவை நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஒரு எஞ்சின் நடுவானிலேயே திடீரென செயலிழந்து போனது. இதனை அடுத்து அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த மாதம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது .இதில் விமானிகள் விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட 160 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+