இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில் ஆகாச நிறுவனத்தின் வருகை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எப்போதும் இல்லாத வகையில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இதற்கு டாடா குழுமம் தான் காரணமா..?
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவு என்பது ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் தனி வர்த்தகப் பிரிவு இப்பிரிவில் வளைகுடா நாடுகள் மட்டுமான சேவைகளை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவின் வர்த்தகம் மூலம் கடந்த 7 வருடத்தில் தொடர்ந்து லாபத்தை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் முதல் முறையாக நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
22.9 லட்சம் வாடிக்கையாளர்கள்
2022 ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவு சேவையின் வாடிக்கையாளர் எண்ணிக்கை முந்தைய ஆண்டை காட்டிலும் 56 சதவீதம் அதிகரித்து 22.9 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையிலும் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
72.33 கோடி ரூபாய் நஷ்டம்
மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2022 நிதியாண்டில் 72.33 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ள நிலையில் 2021 ஆம் நிதியாண்டில் 98.21 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2022 ஆம் நிதியாண்டில் 10,172 விமானப் பயணங்களை மேற்கொண்ட நிலையில் இதில் வெறும் 190 மட்டுமே உள்நாட்டுப் பயணங்கள்.
டாடா குழுமம்
இதற்கு காரணம் டாடா குழுமம் தானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை..! 2022 ஜனவரி 27 ஆம் தேதி தான் டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியது. இதுவரையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இருந்தது.
24 737 விமானங்கள்
2022க்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2015ல் 61 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்தது. கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது காலாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக விமானச் சேவைகள் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்ட நிலையில் 24 737 விமானங்களை வைத்துள்ளது.
15 நாடுகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய், அபுதாபி, ஷார்ஜா, ராஸ்-அல்-கைமா, அல் ஐன், மஸ்கட், சலாலா, பஹ்ரைன், தோஹா, குவைத், தம்மாம், ரியாத், ஜித்தா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய 15 நாடுகளுக்கு விமானச் சேவை அளிக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications