மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக பல நாடுகளில், பல நிறுவனங்கள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மஸ்கட் (ஓமன்) விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
மார்ச் 3, 2026 முதல் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மஸ்கட்டில் இருந்து முதல் விமானம் திருச்சிராப்பள்ளிக்கு காலை 10:25 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்படும். இது இந்தியாவில் இருந்து ஓமனுக்கு மீண்டும் பயணிகள் செல்லும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மஸ்கட் விமான சேவை மீண்டும் தொடங்குவது மூலம் அங்கு சிக்கியுள்ள பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
இருப்பினும், பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் மார்ச் 3 அன்று இரவு 11:59 மணி வரை (இந்திய நேரம்) ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்து மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. விளைகுடா நாடுகளில் இருக்கும் விமான நிறுவனங்களும், விமானங்களும் சேவையை நிறுத்தியிருப்பதை தாண்டி உலக நாடுகளில் இகுந்து விளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் உலகெங்கும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டின் 8 விமான நிலையங்களில் இருந்து சுமார் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான சூழ்நிலையில் தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது பயணிகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
இந்த சூழ்நிலையில் மஸ்கட்-ல் இருந்து தமிழ்நாட்டுக்கு வர திட்டமிட்டுள்ளவர்கள் விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் சமீபத்திய அப்டேட்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது பயணிகள் உடனடியாக அறிவிக்கப்படுவர்.
More From GoodReturns

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

சிலிண்டர் தட்டுப்பாடு: 2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!



Click it and Unblock the Notifications